Sunday, October 31, 2004

ஒரே ஒரு ஊர்ல யோசித்தவர்

வழக்கம்போல டைனோ சரியான விடையளித்திருந்தார். உபரியாக ஏற்கெனவே இது குமுத்தில் வந்தது என்று தகவல் அளித்திருக்கிறார். இருக்கலாம், ஆனால் இந்தப் புதிர் எனக்கு சின்ன வயதிலேயே தெரியும்(அப்ப இருந்தே லூஸா?) என்று தெரியப்படுத்திக் கொள்கிறேன். மேலும் இந்த வலைத்துணுக்கில் வெளிவருபவை எதுவுமே எனது சொந்தப் படைப்பு அல்ல(சொந்தப் படைப்புகளுக்கு தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்) என்பதையும் முதலிலேயே ஒப்புக்கொண்டுள்ளேன். அதை மறுபடியும் உறுதிப்படுத்துகிறேன்.

இப்பொழுது விடை(மன்னிக்கவும் கேள்வி?!?!):

"'தப்பிச்சு போற சரியான வழி எது'ன்னு அந்த இன்னொரு காவலாளிக்கிட்டே கேட்டா அவன் எந்த வாசலைக் காட்டுவான்னு?" ஒரு காவலாளிக்கிட்ட கேக்கனும். அவன் காட்டுகிற வாசலை விட்டுவிட்டு இன்னொரு வாசல் வழியா போனா தப்பிச்சுரலாம். ஏன்னா, இந்தக் கேள்விக்கு இரண்டு பேருமே தவறான வாசலைத்தான் காட்டுவார்கள்.

No comments:

Post a Comment