Tuesday, October 19, 2004

வந்துட்டேன்யா! வந்துட்டேன்!!

இன்னும் எனக்கு கணிணி கிடைக்கவில்லை. இருந்தாலும் என் வாசகர்கள் என்னை தேடுவதை வெப் கௌண்டெர்(புதுசு) மூலம் தெரிந்து கொண்டதால், மறுபடியும் வந்துவிட்டேன். டைப் பண்ணக் கூட வலைப்பூவின் பொங்கு தமிழைத்தான் கடன் வாங்கினேன்.

இந்த வாரம் ரா.கி.யின் "அறிவுக்கு ஆயிரம் வாசல்" புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பல விஷயங்கள் நம் வலைத் துணுக்கிற்கு தோதாக இருப்பதால், இனிமேல் அதிலிருந்தும் கொஞ்சம் தட்டி விடப் போகிறேன்(அதான வேலையே!). சில கவிதைகளைக் கூட நான் ரசித்ததால், கவிதைகளுக்கும் நம் வலைத் துணுக்கில் இடம் தரப் போகிறேன்.

இப்போ ஒரு கவிதை...

நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமுமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்

..................- ஆத்மாநாம்('காகிதத்தில் ஒரு கோடு')

புரிஞ்சிருச்சா? புரியலைனா(எனக்கு புரியலை!), கொஞ்சம் யோசிச்சு புரிஞ்சுக்கோங்க.

No comments:

Post a Comment