Monday, December 12, 2005

தோனியும் சேவாக்கும்

முந்தின கேள்விக்கு விடை சொல்ல இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பதால், கிரிக்கெட் சீசனை வீணாக்காமல் ஒரு கிரிக்கெட் கேள்வி கேட்கிறேன்.

தோனியும் சேவாக்கும் பாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள்(எந்த கிரவுண்டில் என்று குதற்கமாக கேட்காதீர்கள்). இருவருமே 94 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 49 ஓவர்களும் நான்கு பந்துகளும் வீசியாயிற்று. இன்னும் இரண்டு பந்துகளே பாக்கி. இன்னும் 7 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும். ஆனால் ஆட்ட முடிவில் தோனி, சேவாக், இருவரும் செஞ்சுரி எடுத்திருந்தனர். இது எப்படியென்று விளக்க முடியுமா?

2 comments:

Show/Hide Comments

Post a Comment