Thursday, November 18, 2004

தேங்காய் வியாபாரி பொழைச்சார்!!!

ஒரு தேங்காய் கூட மிச்சமில்லைன்னா, தேங்காய் வியாபாரி என்னத்துக்கு ஆவார். அதனால லாரி டிரைவர்(அல்லது கிளீனர்) கொஞ்சம் அறிவாளித்தனமா என்ன பன்னினார்னா, ஒரு மூடையை பிரித்து இரண்டுரண்டு தேங்காவா ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுத்துக்கிட்டு வந்தார். பன்னிரண்டாவது செக்போஸ்டில் கொடுத்து முடிஞ்சதும் ஒரு மூடையில் 1 தேங்காயும், இன்னோரு மூடை முழுசாவும் இருந்தது. பதிமூனாவது செக்போஸ்டில், மீதமிருந்த ஒரு மூடைக்கு மீதமிருந்த ஒரு தேங்காயை கொடுத்து விட்டார். மீதி பன்னிரண்டு செக்போஸ்டிலும் இரண்டாவது மூடையைப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு தேங்காய் கொடுத்தார். மீதி 13 தேங்காயை திருச்சி கொண்டு போய் சேர்த்து, தேங்காய் வியாபாரியை காப்பாத்திட்டார்.

இந்த தடவை நம்ம வழக்கமான வாசகர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. அவர்களுக்கு என்ன வேலையோ தெரியவில்லை. புதுசா சரவணன் ,Srini இரண்டு பேரும், விடை சொல்லி இருக்கிறார்கள். இதில் Srini சொன்னது மிகச் சரியானது. சரவணன் , பிரச்சனையை சரியாக அணுகியிருந்தாலும், சின்ன சறுக்கல் சறுக்கி விட்டார். விடை சொன்ன இரண்டு பேருக்கும், வலைத்துணுக்குவாசிகள் சார்பாக எனது பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment