Thursday, January 12, 2006

இஷ்டத்துக்கு யோசிங்க - சில க்ளூஸ்

போன துணுக்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாருமே நல்லா இஷ்டத்துக்கு யோசிச்சிருக்கீங்க. ஆனாலும் சரியான விடைகள் அல்லது அதற்கு நெருக்கமான விடைகள் கூட வரவில்லை. அதனால் மேலும் சில க்ளூஸ் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். இஷ்டத்துக்கு யோசிச்சதாலே வந்த விடைகள் எல்லாமே சுவாரஸ்யமா இருக்கு. மேலும் சுவாரஸ்யமான விடைகளை எதிர்பார்க்கிறேன். இன்னும் கொஞ்சம் யோசிங்க.


1)
அ. அவன் நிஜமாவே தற்கொலை செய்து கொள்ள சென்றானா? - ஆமாம். குதித்தும் விட்டான். தற்கொலை செய்து கொள்பவன் பேரஷூட் கட்டிக்கொண்டு குதிக்க மாட்டான் என்று நினைக்கிறேன்.
ஆ. அது நிஜமாகவே உயரமான கட்டிடமா? - ஆமாம். நாலடியெல்லாம் இல்லை.

2)
அ. அவன் பயனம் செய்தது சராசரியாக எல்லோரும் ஓட்டும் கார்தானா? - இல்லை. அதற்காக ஜேம்ஸ் பான்ட் டைப் காரும் இல்லை.
ஆ. அவன் சேர வேண்டிய இடத்தை விஷேச கருவிகள் மூலம் பார்த்தானா? - இல்லை.

3)
அ) சம்பவத்துக்கு பின் அவன் உயிரோடிருந்தானா? - ஆமாம். தீர்காயுசு.
ஆ) சம்பவத்துக்கு பின் அவனுக்கு கண் தெரியுமா? - ஆம். நன்றாகத் தெரியும்.
இ) அவன் நகரத்தில் வசிப்பவனா? -இல்லை.
ஈ) அவன் சும்மா சுட்டானா? - இல்லை. ஒரு உயிர் ஹோகயா.


4)
அ) அவனிடம் நெருப்பு பற்ற வைப்பதற்க்கு போதுமான வசதி இருந்ததா? - ஆமாம் இருந்தது.
ஆ) ஒன்பதாவது நாளே மழை பெய்திருந்தால், அன்றே அவன் நெருப்பை பற்ற வைத்திருப்பானா? - மாட்டான்.
இ) முதல் நாளே அவன் நினைத்தால் நெருப்பை பற்ற வைக்க முடியுமா? - முடியும்.
ஈ) அப்படி அவன் முதல் நாளே நெருப்பு பாற்ற வைத்திருந்தால் ஏதாவது உபயோகம் இருந்திருக்குமா? - இல்லை. குளிர் காய்வதை தவிர.

No comments:

Post a Comment