Monday, April 18, 2005

துப்பறியுங்கள் பார்க்கலாம்!!!

அருண், சரவணன், அமுதா, கீதா நால்வரும் உறவுக்காரர்கள். இந்நால்வரில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். உங்களுக்கு இரண்டே இரண்டு Clueதான் கொடுப்பேன்.

1. அருணின் சகோதரி, கொலை நடந்த பிறகு, ஒரே ஒருமுறைதான் அமுதாவின் கணவரோடு பேசியிருக்கிறார்.
2. சரவணனின் சகோதரி, கொலை நடந்த பிறகு, சரியாக இரண்டு முறைதான், கொலை செய்யப்பட்டவரின் கணவனோடு அல்லது மனைவியோடு பேசியிருக்கிறார்.

இப்பொழுது கொலை செய்யப்பட்டது யார்? எங்கே பல் விளக்கி துப்புங்கள், சை! துப்புத்துலக்குங்கள் பார்க்கலாம்!

No comments:

Post a Comment