Wednesday, February 16, 2005

மறுபடியும் கவித!?!

நண்பர் நிலா ரசிகனின் கவிதை. இது கவிதை இலக்கணத்துக்குள் வருமா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்லப்பட்ட விஷயம் எனக்கு பிடித்திருந்தது.

சொந்த நாட்டு அகதிகள்

அலுவலகம் செல்ல
தாமதமானாலும் கூட
ஐந்து நிமிடம்
செய்தித்தாளில்
தலைப்புச் செய்திகள்
படிக்க நேரமிருக்கிறது...

வாரத்தில் ஆறு
நாட்கள் வேலை
வேலை என்று
அலைந்தாலும்
தவறாமல் வாரம்
இருமுறை சினிமாவுக்கு
போக நேரமிருக்கிறது...

நேரத்தை வீணாக்குவது
பிடிக்காது என்று
சொல்லிக்கொண்டு
கிரிக்கெட் போட்டி என்றால்
மட்டும் தவறாமல்
பார்க்க நேரமிருக்கிறது...

பிறந்த ஊர்
விட்டு பிழைப்புக்காக
வந்த இந்த நகரவாழ்க்கையில்
எல்லாவற்றிற்க்கும் நேரமிருந்தாலும்,
"தாத்தா பாட்டியை பார்க்க

ஊருக்கு எப்பொ போறோம்பா?"
என்று மழலை மொழியில்
கேட்கும் மகனிடம் மட்டும்
உடனே சொல்ல முடிகிறது
"அதுக்கெல்லாம் அப்பாவுக்கு
நேரமில்லடா" என்று!

- நிலா ரசிகன்

No comments:

Post a Comment