Friday, December 09, 2005

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!

திரு. பாலகிருஷ்ணன் தம்பதியர், அவர்களுடைய பத்தாவது திருமணநாளை கொண்டாட நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர். நான்கு தம்பதிகள் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த நான்கு தம்பதிகளில் சிலர் ஒருவருக்கொருவர் தெரிந்தவர். தெரியாதவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து கொண்டனர். விருந்தின்போது திரு. பாலகிருஷ்ணன் ஒவ்வொருவரிடமும் "நீங்கள் எத்தனை பேருக்கு வணக்கம் தெரிவித்தீர்கள்?" என்று கேட்டார். கிடைத்த விடைகள் திரு. பாலகிருஷ்ணனை ஆச்சரியப்படுத்தின. ஏனென்றால் ஒவ்வொருவரும் வேறு வேறு விடைகளை தெரிவித்தனர். அப்படியென்றால் திருமதி.பாலகிருஷ்ணன் கூறிய விடையென்ன?


பின்குறிப்பு:

இந்த கணக்கில் மொத்தம் பத்து நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். திரு. பாலகிருஷ்ணன் தன்னைத் தவிர மற்ற ஒன்பது நபர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். கொஞ்சம் கஷ்டமான கேள்வி கேட்டு ரொம்ப நாளாச்சு. ஆனாலும் நம்ம வாசகர்கள் பயங்கர புத்திசாலிங்கங்கற நம்பிக்கைல இந்த கேள்வியை பதிக்கிறேன்.

9 comments:

Show/Hide Comments

Post a Comment