Sunday, October 31, 2004

ஒரே ஒரு ஊர்ல யோசித்தவர்

வழக்கம்போல டைனோ சரியான விடையளித்திருந்தார். உபரியாக ஏற்கெனவே இது குமுத்தில் வந்தது என்று தகவல் அளித்திருக்கிறார். இருக்கலாம், ஆனால் இந்தப் புதிர் எனக்கு சின்ன வயதிலேயே தெரியும்(அப்ப இருந்தே லூஸா?) என்று தெரியப்படுத்திக் கொள்கிறேன். மேலும் இந்த வலைத்துணுக்கில் வெளிவருபவை எதுவுமே எனது சொந்தப் படைப்பு அல்ல(சொந்தப் படைப்புகளுக்கு தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்) என்பதையும் முதலிலேயே ஒப்புக்கொண்டுள்ளேன். அதை மறுபடியும் உறுதிப்படுத்துகிறேன்.

இப்பொழுது விடை(மன்னிக்கவும் கேள்வி?!?!):

"'தப்பிச்சு போற சரியான வழி எது'ன்னு அந்த இன்னொரு காவலாளிக்கிட்டே கேட்டா அவன் எந்த வாசலைக் காட்டுவான்னு?" ஒரு காவலாளிக்கிட்ட கேக்கனும். அவன் காட்டுகிற வாசலை விட்டுவிட்டு இன்னொரு வாசல் வழியா போனா தப்பிச்சுரலாம். ஏன்னா, இந்தக் கேள்விக்கு இரண்டு பேருமே தவறான வாசலைத்தான் காட்டுவார்கள்.

Friday, October 29, 2004

மூளையின் பலம்

எனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது. இதில் நமது மூளை செய்யும் Pattern Reconization என்னை வியக்க வைத்தது. கொஞ்சம் கூடத் தடுமாறாமல் என்னால் இதைப் படிக்க முடிந்தது. நீங்களும் படித்து வியப்படையுங்கள்!!!

கீழே உள்ளதை முடிந்த வரை வேகமாக வாசிக்க முயற்சி செய்யுங்கள்.

I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdgnieg The phaonmneal pweor of the hmuan mnid Aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Amzanig huh? yaeh and I awlyas thought slpeling was ipmorantt!

என்ன உங்கள் மூளையின் பலம் எவ்வளவுன்னு இப்ப புரிஞ்சிருச்சா?

Wednesday, October 27, 2004

ஒரே ஒரு ஊர்ல

ஒரே ஒரு அறிவாளி இருந்தானாம்(உம்). அவன் பெரிய அறிவாளின்னு ராஜா வரைக்கும் தெரிஞ்சு போச்சாம்(உம்). உடனே ராஜா 'என்னை விட பெரிய அறிவாளியா? அதையும் பாத்துடலாம்' னு நினைச்சி, அந்த அறிவாளியை கைது பண்ணிட்டான்(உம்). அவனை அடைச்சு வச்ச சிறைக்கு ரெண்டு வாசல். ஒவ்வொரு வாசலிலேயும் ஒரு காவலாளி(உம் போட்டுகிட்டு இருக்கீங்களா?).

ராஜா அந்த அறிவாளியைப் பார்த்து, "இந்த ரெண்டு காவலாளிங்கள்ள ஒருத்தன் எப்பவும் பொய்தான் பேசுவான். இன்னொருத்தன் எப்பவும் உண்மைதான் பேசுவான். ஆனா யார் உண்மை பேசுவா; யார் பொய் பேசுவான்னு உங்கிட்ட சொல்ல மாட்டேன். இந்த ரெண்டு வாசல்ல, ஒரு வாசல் வழியா போனா நீ தப்பிச்சுரலாம். இன்னொரு வாசல் வழியா போனா பாதாளச் சிறைல மாட்டிப்பே. எந்த வாசல் எங்கே போகும்னும் சொல்ல மாட்டேன். நீ இந்த ரெண்டு பேர்ல ஒரே ஒருத்தன்ட, ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்கலாம். அத வச்சுக்கிட்டு உன்னால முடிஞ்சா இங்கேருந்து தப்பிச்சுப்போ. இல்லேன்னா பாதாளச்சிறைல மாட்டிக்கிட்டு சாகு"ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

அந்த அறிவாளியும் ஒரே ஒரு காவலாளிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு, அவன் சொன்ன பதில வச்சி சரியான வாசலைக் கண்டுபிடிச்சு தப்பிச்சுட்டான்.

ஆமா அவன் அப்பிடி என்ன கேள்விய கேட்டிருப்பான்? கேள்வி என்னன்னு யோசிச்சு, அதை Post Cardஇல் எழுதி, http:\\www.yosinga.blogspot.com அப்படிங்கர முகவரிக்கு அனுப்பினீங்கன்னா, எனக்கு வந்து சேராது. அதனால ஒழுங்கா commentலயே உங்களோட பதிலை, ஸாரி, கேள்வியைக் கேட்டுருங்க.

Tuesday, October 26, 2004

கல்லூரி ஆத்திச்சூடி

முந்தினப் பதிவுக்கு ஒரு பரிகாரம் தேடலாம்ன்னு மேட்டர் தேடுனப்பொ இது கிடைச்சுது. ஆனாலும் இது மேல்கைன்டுக்கு ஒத்துவராது(இன்னைக்கே ரெண்டு தடவை மேல்கைன்டை வம்புக்கு இழுத்துட்டேன்ல!). ஏன்னா இது கல்லூரி ஆத்திச்சூடி. ஆத்திச்சூடி படிக்கிற ரிதத்தோட இதப் படிங்க.


அரியர்ஸ் மற
இரு பெண் காதலி
உடையில் கவனங்கொள்
ஊர் சுற்று
கசப்பது படிப்பு
கைக்கொள் பிட்டை
சாடை புரிந்து கொள்
சினிமா தினம் பார்
சைட்டை மறவேல்
தினம் ஃபிகர் மாற்று
தேர்வு பயமகற்று
பயிர் செய் கடலை
பாஸ் மார்க் போதுமே
ஃபிகர் பின் சுற்று
புகைப்பதை கைவிடேல்
பைக்கோடு செல்
நைட் ஷோ தவறேல்
- ஆர்.லோகனாதன்

தாயா? தாரமா?

தாய்க்குப் பின் தாரம்
தாரம் வந்ததும் -
தாய் ஓரம்!
- ஏ.கோவிந்தன்.

சத்தியமா மேல்கைன்டுக் காரங்களை கடுப்பேத்தனும்லாம் இதைப் போடலை. சும்மா, நல்லா இருந்ததால் போட்டேன். வேற ஒன்னுமில்லை!

சிறந்தப் புத்தகம்

கணவனிடம் மனைவி சொன்னாள், "அதென்னமோ தெரியல! இந்தப் புத்தகத்தை கையில் எடுத்தால் கடைசித் தாள் வரை கீழே வைக்க மனம் வரவில்லை."

அவள் குறிப்பிட்டது கணவனின் செக் புத்தகத்தை.

Saturday, October 23, 2004

இத விட அது பெட்டர்

ஒரு பிரபல நாவல் திரைப்படமாக வந்தது. "படம் எப்படி இருந்தது?" கேட்டது நம்பர் ஒன்று. "பரவாயில்லை. ஆனால் புத்தகம் இதைவிட நன்றாயிருந்தது!" சொன்னது நம்பர் இரண்டு.

பேசிய நம்பர் 'ஒன்று'ம், 'இரண்டு'ம் கழுதைகள்.

அருவா சோமசேகர்

Friday, October 22, 2004

கவித! கவித!!

கவிதைப் புத்தகம் வெளியிடுவது என்பது, மிக உயரமான மலை உச்சியில் நின்று கொண்டு, ஒரு ரோஜா இதழைக் கீழே போட்டுவிட்டு, அதற்கு எதிரொலி கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு நிற்பது போல.

- டான் மார்க்கிஸ்.

கவிதை ஒன்றை வலைத் துணுக்கில் வெளியிடுவது என்பது, மிக உயரமான மலை உச்சியில் நின்று கொண்டு, ஒரு சிலந்தி வலையின் இழையைக் கீழே போட்டுவிட்டு, அதற்கு எதிரொலி கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு நிற்பது போல.

- யோசிப்பவர்.

ஒன்னுமில்லே! சும்மா நாமும் பொன்மொழி(?!?!) சொன்னா என்னன்னு தோனிச்சு; அதான். சரி இப்ப கவிதை.

எந்த....

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்.
எந்த ராமச்சந்திரன்
என்று நான்
கேட்கவுமில்லை, அவர்
சொல்லவுமில்லை

- நகுலன்(கோட் ஸ்டாண்ட் கவிதைகள்)

ஆதி காலத்து TITAN

ஆதி காலத்துக் கடிகாரம் புதிருக்கு, டைனோ, ஜாஃபர் இருவரும் சரியான பதிலை சொல்லியிருந்தார்கள். ஜாஃபர் இன்னமும் விளக்கமாக தன் பதிலைக் கூறியிருக்கலாம்(முதலில் எனக்கு புரியவில்லை).

நமது வாசகர்கள் தமிழில் எளிதாக Comment அடிக்க ஒரு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். விரைவில் செய்வேன். அதற்கு வலைப் பதிவு நண்பர்கள் கொஞ்சம் உதவினால் நன்றாயிருக்கும். இப்பொழுது விடை தமிழில்.

இரண்டு கடிகாரத்தையும் ஒரே நேரத்தில் Start செய்ய வேண்டும். நான்காவது நிமிட முடிவில் இரண்டாவது கடிகாரத்தை திருப்பி வைக்க வேண்டும்.

அப்புறம் ஏழாவது(ஆரம்பத்திலிருந்து) நிமிட முடிவில் முதல் கடிகாரம் காலியாகியிருக்கும். இந்த நேரத்தில் இரண்டாவது கடிகாரத்தில் ஒரு நிமிடத்துக்கான மண் பாக்கியிருக்கும்.இப்பொழுது முதல் கடிகாரத்தை திருப்பி வைக்கவும்.

எட்டாவது நிமிட முடிவில், மறுபடியும் இரண்டாவது கடிகாரம் காலி. முதல் கடிகாரத்தில் ஒரு நிமிடத்துக்கான மண் இறங்கியிருக்கும். இப்பொழுது முதல் கடிகாரத்தை திருப்பி வைக்க வேண்டும். அதில் மண் காலியாகும்பொழுது ஒன்பது நிமிடம் ஆகியிருக்கும்.

பிருஷகேது = விருஷகேது

கர்ணனின் மகன் பெயர் "பிருஷகேது" என்று நான் படித்தேன். டைனோ "விருஷகேது" என்கிறார். இரண்டுமே சரிதான் என்று எண்ணுகிறேன். 'ப' வரிசை சில சமயம் தமிழ்ப்படுத்தும்பொழுது 'வ' வரிசை ஆவது உண்டு. உதாரணம்: பீமன் என்பதை தமிழில் சிலர் வீமன் என்பர். அதனால் பிருஷகேது = விருஷகேது என்று முதல் கேள்விக்கு தீர்ப்பளிக்கப்படுகிறது. எனது விளக்கம் தவறாயிருந்தால், தமிழறிஞர்கள் சரியான விளக்கமளிக்குமாறு வேண்டுகிறேன்.

அடுத்தக் கேள்விக்கு ரா.சுப்புலட்சுமி "ராதேயன்" என்று பதில் சொன்னார். ராதேயன் என்பது கர்ணனின் பட்டப்பெயரே அன்றி, இயற்பெயர் அல்ல. அவனது இயற்பெயர் "வசுசேனன்".

Wednesday, October 20, 2004

ஆதி காலத்துக் கடிகாரம்

பழங்காலத்துக் கடிகாரமான மணற்கடிகாரத்தை உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்(இதெல்லாம் ரொம்ப ஓவர்!!). அப்படிப்பட்டக் கடிகாரம் இரண்டு இருக்கிறது. ஒரு கடிகாரத்தில் உள்ள மண் முழுவதும் கீழே இறங்க ஏழு நிமிடங்களாகும். இதே போல் இரண்டாவது கடிகாரத்தைக் கொண்டு நான்கு நிமிடங்கள் கணக்கிட முடியும்.

இப்பொழுது இந்த இரண்டு கடிகாரங்களைக் கொண்டு சரியாக ஒன்பது நிமிடங்கள் கணக்கிட வேண்டும்.

சுலபமான கணக்குதான், மணிக்கணக்கா யோசிக்காதீங்க. சீக்கிரம் யோசிங்க.

Tuesday, October 19, 2004

கர்ணனைத் தெரியுமா?

கர்ணன் என்றதும் என் நினைவுக்கு வருவது சிவாஜிதான். எங்கள் வீட்டில் வீ.சி.ஆர் வாங்கிய புதிதில், சிறுவயதில் கர்ணன் படத்தை பலமுறை பார்ப்பேன்(நானும் மத்தவங்க கணக்கா டைரிக்குறிப்பு மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன்ல!). சரி! இப்ப அதையெல்லாம் விட்டு விடுவோம்.

கர்ணனைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

1. கர்ணனின் மகன் பெயர் என்ன?
2. குழந்தை கர்ணனுக்கு, தேரோட்டி வைத்தப் பெயரென்ன?(அதாவது இயற்பெயர்)

வைகுண்டம்

ஒரு மயானத்தின் கேட்டில் கீழ்கண்ட அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.
'திரு.ராமனாதன் இன்று காலை ஒன்பது மணிக்கு வைகுண்டம் ஏகினார்.'

மறுநாள் அதன் கீழே யாரோ இன்னொரு காகிதம் ஒட்டியிருந்தார்கள்.
'வைகுண்டம். காலை மணி பத்து. இதுவரை திரு.ராமனாதன் இங்கு வந்து சேரவில்லை. கவலையாக இருக்கிறது!'

வந்துட்டேன்யா! வந்துட்டேன்!!

இன்னும் எனக்கு கணிணி கிடைக்கவில்லை. இருந்தாலும் என் வாசகர்கள் என்னை தேடுவதை வெப் கௌண்டெர்(புதுசு) மூலம் தெரிந்து கொண்டதால், மறுபடியும் வந்துவிட்டேன். டைப் பண்ணக் கூட வலைப்பூவின் பொங்கு தமிழைத்தான் கடன் வாங்கினேன்.

இந்த வாரம் ரா.கி.யின் "அறிவுக்கு ஆயிரம் வாசல்" புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பல விஷயங்கள் நம் வலைத் துணுக்கிற்கு தோதாக இருப்பதால், இனிமேல் அதிலிருந்தும் கொஞ்சம் தட்டி விடப் போகிறேன்(அதான வேலையே!). சில கவிதைகளைக் கூட நான் ரசித்ததால், கவிதைகளுக்கும் நம் வலைத் துணுக்கில் இடம் தரப் போகிறேன்.

இப்போ ஒரு கவிதை...

நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமுமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்

..................- ஆத்மாநாம்('காகிதத்தில் ஒரு கோடு')

புரிஞ்சிருச்சா? புரியலைனா(எனக்கு புரியலை!), கொஞ்சம் யோசிச்சு புரிஞ்சுக்கோங்க.

Thursday, October 14, 2004

இனிய செய்தி!!!

என் அன்பார்ந்த ஆயிரக்கணக்கான, சரி! நூற்றுக்கணக்கான, சரி! சரி! சில பத்து வாசகர்களுக்கு ஒரு இனிய செய்தி!!

இன்னும் ஒரு வாரத்துக்கு உங்களை நான் தொல்லைப்படுத்த போவதில்லை. அது, கொஞ்சம் கணிணி பற்றாக்குறை ஆகிவிட்டது. அதனால் ஒரு வாரம் விடுமுறை(ஆமா! நீ இல்லைன்னு இங்கே யார் அழுதா?)

ஒரு சோக செய்தி:

கண்டிப்பாக ஒரு வாரத்தில் மறுபடியும் தொல்லை கொடுப்பேன்.(மறுபடியுமா?!?!)

Sunday, October 10, 2004

பார்த்து ரசிக்க(முடிந்தால் சிரிக்க)

Thursday, October 07, 2004

ரோமன் நம்பர்கள்

MID, MIC, MIL, MIX. இந்த நான்கு ரோமன் நம்பர்களின் மதிப்புகள்(Values) என்னென்னவென்று புத்தகம் எதையும் புரட்டாமல் உங்களில் எத்தனை பேரால் சொல்ல முடியும்(கையத் தூக்குங்க). எனக்கு ஆயிரம் வரைதான் தெரியும்(இதுக்கே இவ்வளவு அல்டாப்பா?!?). அதற்கு மேல் தெரிந்தவர்கள் எனக்கு சொல்லுங்களேன்.


I --- 1
II -- 2
V --- 5
X --- 10
L --- 50
C --- 100
D --- 500
M --- 1000
இப்பொழுது உங்களுக்கே நான்கு எண்களின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

MID = 1499
MIC = 1099
MIL = 1049
MIX = 1009
சரி! ஒரே ஒரு சின்னக்கேள்வி! MIDD, MICC, MILL, MIXX, MICD, MIDC, MILD, MIDL இந்த எட்டில் எவை எவை சரியான(Valid) ரோமன் எண்கள். பேப்பர் பேனா இல்லாமயே யோசிங்க.


பி.கு.(வர வர, இது ஒன்னு கண்டுபிடிச்சிருக்காம்பா!)
இது இந்த வாரப் புதிரில்லை. அதனால நான் பதிலெல்லாம் சொல்ல மாட்டேன்(தெரியாதா?). நீங்களே உங்க சொந்த முயற்சில கண்டுபிடிச்சி கமெண்ட் அடிச்சிருங்க.

CODE எழுதியவர்

MK Codingஇல் பெரிய ஆளா இருப்பார் போல. முதலில் பிட் ஆப்பரேட்டர்கள் எல்லாம் உபயோகித்து இரு சவால்களுக்கும் பதில் தந்திருந்தார். அவை நெகட்டிவ் எண்களுக்கும் கூட வேலை செய்தன. ஆனால் அவை C/C++ போன்ற பிட் ஆப்பரேட்டர்கள் உள்ள மொழியில் மட்டும்தான் வேலை செய்யும் என்று நான் சொன்னவுடன்(ஒத்துக்க மாட்டியே!!), இந்தா வச்சுக்கோ! என்று வேறு விடைகள் தந்தார். அதில் இரண்டாவது சவாலுக்கான விடை மட்டும் எனது விடையோடு(உனக்கு மட்டும்தான் தெரியுமாக்கும்!) ஒத்துப்போனது. அதற்காக முதல் விடை தவறில்லை. அதுவும் சரிதான். இப்பொழுது MKயின் விடைகள்.

சவால் 1
c = (a - b) / abs(a - b)
c = ((a + ca) + (b - cb)) / 2

சவால் 2
c = a - 1
c = c + (a mod 2) * 2

MKயின் பிட் ஆப்பரேட்டர்கள் விடை
சவால் 1
c = (sizeof(int) * 8) - 1
c = (((a - b) & (2^c)) >> c) * b + (((b - a) & (2^c)) >> c) * a

சவால் 2
c = a - 1
c = c + ((a & 1) * 2)

முதல் சவாலுக்கான எனது விடை
c = (a * (a div b) + b * (b div a)) / ((a div b) + (b div a))

Sunday, October 03, 2004

CODE எழுதுங்க

இன்னைக்கு புதிர் இல்லை. ஒரு சவால்; இல்லை! அறிவுபூ....; வேண்டாம்! சரியா வரலை. 'சவால்'னே வைச்சுக்குவும். இந்த சவால் சாப்ட்வேர் ப்ரோக்ரமர்களுக்கானது(அதுக்காக மத்தவங்க கலந்துக்காதீங்கன்னு சொல்லலை). பல ப்ரொக்ரமர்களுக்கு இந்தக் கேள்வி தெரிந்திருக்கும். Interviewக்களில் கூட பார்த்திருப்பார்கள்.

அதாவது a,b ன்னு இரண்டு variables. இந்த இரண்டே இரண்டு variablesஐ மட்டும் வைத்துக்கொண்டு(வேறு variable எதுவும் பயன்படுத்தக்கூடாது), இவைகளின் மதிப்புகளை(Values) பண்டமாற்றிக்(swap) கொள்ள வேண்டும்(சே! தமிழில் எவ்வளவு வீக்காய் இருக்கிறேன்!!). இதற்கு பதிலும் பலருக்குத் தெரிந்திருக்கும். கீழேயுள்ள CODEதான் பதில்.

a = a + b
b = a - b
a = a - b


பொறுங்க! பொறுங்க!! இது சவால் இல்லை. அது இனிமேதான் வருது(இன்னைக்கு ரொம்ப இழுக்கிறேனில்ல).


சவால் - 1

a,b ன்னு இரண்டு variables. இந்த இரண்டில் நீங்க பெரிய நம்பர் எதுன்னு கண்டுபிடிக்கனும். ஆனா ரெண்டு கண்டிசன். 'கண்டிசன்' மற்றும் 'கண்ட்ரோல் ஸ்டரக்சர்'(அதாங்க! if.,for.,while., etc.,.) எதுவும் உபயோகிக்கக்கூடாது. ஆனா +,- மாதிரி கணித குறீயீடுகள், மற்றும் log, sqrt மாதிரி கணித functions ஆகியவைகளை பயன்படுத்தலாம். முடிவில் எனக்கு c என்கிற variableஇல் பெரிய நம்பர் இருக்கனும்.


சவால் - 2

aன்னு ஒரே ஒரு variable. இப்ப அதில் ஒற்றைப்படை(ODD) எண்ணிருந்தால், அதற்கு அடுத்த இரட்டைப்படை(EVEN) எண் வேண்டும். அப்படியில்லாமல் இரட்டைப்படை(Odd) எண்ணிருந்தால், அதற்கு முந்தைய ஒற்றைப்படை(Even) எண் வேண்டும். ஆதாவது 1 இருந்தா 2 வரணும்; 2 இருந்தா 1 வரணும். 15 இருந்தா 16 வரணும்; 16 இருந்தா 15 வரணும்.
கண்டிசன்ஸ் வழக்கம்போல்தான்(சவால் 1இல் உள்ளவை).

பின்குறிப்பு(விட மாட்டியா?):

மேலுள்ள இரண்டு சவால்களும் பாஸிட்டிவ் எண்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பஞ்ச பாண்டவர்களின் ஆயுள்

பாண்டு மறைந்து பாண்டவர்கள்
அஸ்தினாபுரம் சென்றபோது
தருமர் வயது ........................................... 16 வருடம்
அஸ்தினாபுரத்தில் வசித்ததும்,
குருகுலவாசமும் ...................................... 13 வருடம்
சாலி கோத்தரர் ஆசிரமத்தில் ...................... 1/2 வருடம்
வேத்ரகியத்தில் ......................................... 1/2 வருடம்
பாஞ்சாலன் மனையில் .............................. 1 வருடம்
அஸ்தினாபுரத்தில் ..................................... 5 வருடம்
இந்திரபிரஸ்தம் ........................................ 23 வருடம்
வனவாசம் ............................................... 12 வருடம்
அக்ஞாதவாசம் ......................................... 1 வருடம்
துரியோதன வதத்திற்கு
பின் அரசு புரிந்தது ................................... 36 வருடம்
பரிட்சத்துக்கு முடி சூட்டியபின்
தவ வனத்தில் ......................................... 1/2 வருடம்
-------------------------------------------------------------------------------
.......................................................... 108 1/2 வருடம்
-------------------------------------------------------------------------------

- கிருபானந்த வாரியார்.

"எனி" கீ



இந்தப் படத்துக்கு விளக்கம் தேவையில்லை.