Tuesday, February 28, 2006

கோடிட்ட இடங்களை....

நீங்க கணக்குல சிங்கமா(எத்தனை நாளைக்குதான் புலியான்னு கேக்குறது), சிறு நரியா(நரியெல்லாம் இங்கே எதுக்கு வந்துச்சு?), இல்லைன்னா சாதாரண மனுசனான்னு பார்க்கலாமா? கீழேயுள்ள இரு கோடிட்ட இடங்களை முதலில் நிரப்புங்க. அப்புறமா யார் யார் என்ன Speciesன்னு சொல்றேன்.


அ) 32, 35, 40, 44, 52, 112, __?__

ஆ) 3, 3, 5, 4, 4, 3, 5, __?__

Monday, February 20, 2006

சார்பியல் தத்துவம் - வெளி சார்பானது

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி
--------------------------------------------------


பல நிகழ்ச்சிகள் ஒரே இடத்தில் நடப்பதாக சொல்கிறோம். இந்த கூற்று உண்மையிலேயே அர்த்தமற்றது. இதற்கு ஒரு சின்ன உதாரணத்தை பார்ப்போம்.

நீங்கள் சென்னையில்ரிருந்து டெல்லிக்கு உங்கள் Laptop சகிதம் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பயணத்தின்பொழுது அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற நேரங்களில் நீங்கள் உங்கள் இருக்கையை விட்டு அசையவேயில்லை. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை உங்கள் இருக்கையில் சாய்ந்து கொண்டு சென்னையிலிருக்கும் உங்கள் அலுவலகத்துக்கு இமெயில் செய்கிறீர்கள். உங்களை பொறுத்தவரை நீங்கள் அனுப்பிய எல்லா இமெயில்களும் ஒரே இடத்திலிருந்து அனுப்பியவை. ஆனால் உங்கள் அலுவலகத்தில், அவை ஒரே ஆளிடமிருந்து வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவை.

இரண்டில் எது சரி? இரண்டுமே சரியில்லை. ஏனென்றால் இரண்டுமே கொஞ்சம் உண்மை. கொஞ்சம் பொய். வெளியில்(Space) எந்த இடமும் அல்லது எந்தப் புள்ளியும் அதே இடத்தில் இருப்பது என்ற கருத்து சார்பானாது.

நீங்கள் இதற்கு ரயிலில் கூட பயணம் செய்ய வேண்டாம். "நீங்கள் அதே இடத்தில் நிற்கிறீகள்" என்றால் அந்த இடம் பூமியை சார்ந்து மட்டுமே அதே இடம். பூமி சுற்றும் சூரியனையோ, பூமியை சுற்றும் சந்திரனையோ கூட சார்ந்து நீங்கள் அதே இடத்தில் நிற்கவில்லை.

இரண்டு நட்சத்திரங்கள் வெளியில் ஒரே கோட்டில் வருகிறது என்றோ, ஒருங்கிணைகிறது என்றோ சொல்கிறொம். இவையெல்லாம் அவையிரண்டும் எந்தப் புள்ளியிலிருந்து பார்வையிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது.

இதன் மூலம் உணர்த்தப்படுவது வெளியில் எந்தப் புள்ளியின் இடமும் சார்பானதே.

- மீண்டும் பார்(அறு)ப்போம்

Friday, February 17, 2006

மூன்று பெட்டிகள்

புதிர் போட்டு ரொம்ப நாளாச்சு. ஒரு சின்னப் புதிர்.

மூன்று பெட்டிகளில் பழங்கள் இருக்கின்றன. ஒன்றில் மாம்பழங்கள் இருக்கின்றன. ஒன்றில் வாழைப்பழங்கள் இருக்கின்றன. மற்றொன்றில் இரண்டும் கலந்திருக்கின்றன. பெட்டிகளின் மீது பெயரெழுதி ஒட்டும்பொழுது எல்லாவற்றையும் தவறாக மாற்றி மாற்றி ஒட்டி விட்டனர்.

இப்பொழுது குறைந்தபட்சமாக எத்தனை பெட்டிகளை திறந்து பார்த்தால் சரியான பெயர்களை பெட்டிகளின் மீது ஓட்ட முடியும்.

Wednesday, February 15, 2006

சார்பியல் தத்துவம் - சார்பு

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு
--------------------------------------------------
"உங்கள் வீடு இருப்பது வலப்பக்கமா, அல்லது இடப்பக்கமா?" என்று ஒருவர் உங்களைப் பார்த்து கேட்கிறார். இந்தக் கேள்விக்கு உங்களால் உடனே சரியாக பதிலளிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அல்லது அப்படியே நீங்கள் சரியாக பதிலளித்தாலும் கேள்வி கேட்டவர் அதை சரியாக புரிந்து கொள்வார் என்று நினைக்கிறீர்களா?

ரொம்ப கஷ்டம்! அதிர்ஷ்டவசமாக அப்படி நடந்தால்தான் உண்டு.

ஆனால் நீங்கள் இப்படி பதிலளிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், "அந்த பிரிட்ஜிலிருந்து ரயில்வே கேட்ட நோக்கி வந்தீங்கன்னா வலது பக்கம்". அப்பொழுது உங்கள் பதில் ஒரு முழுமை பெறுகிறது. கேள்வி கேட்டவரும் சரியாக புரிந்து கொள்வார்.

அதாவது வலது, இடது என்பவை பற்றிப் பேசும் பொழுது அவை சார்பான திசையையும் நீங்கள் சொல்லியாக வேண்டும்.

ஆனால் "வண்டிகள் சாலையின் இடது பக்கம்தான் போகவேண்டும்" என்பது சாலை விதி. இங்கே திசை பற்றி ஏதும் சொல்ல வில்லை. ஆனாலும் நாம் சரியாக புரிந்து கொள்கிறோம். ஏன்? இங்கே வண்டியின் ஓட்டம் நமக்கு திசையை குறிப்பிட்டு சொல்லி விடுகிறது, மறைமுகமாக. வண்டி போகும் திசையை சார்ந்து இடது பக்கமாய் போகவேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.

ஆகவே "வலம்", "இடம்" ஆகியவை சார்பான கருத்துக்கள்.

இப்பொழுது இரவா? பகலா?

இந்தக் கேள்விக்குரிய பதில், பதில் சொல்பவருடைய இடத்தை சார்ந்தது. பதில் சொல்பவர் நியூயார்க்கில் இருந்தால் இப்பொழுது இரவு என்று சொல்வார். ஒருவேளை அவரே சென்னையில் இருந்தால் அதே நேரத்தில் அதே கேள்விக்கு பகல் என்றுதான் பதிலளித்திருப்பார். இரண்டு விடையுமே தவறாகாது, இடத்தை சார்ந்து. ஏனென்றால் "இரவும்", "பகலும்" சார்பான கருத்துக்கள், இடத்தைப் பொறுத்து.

இப்பொழுது உங்களுக்கு சார்பு என்றால் என்னவென்று லேசாக புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


- மீண்டும் பார்(அறு)ப்போம்

சார்பியல் தத்துவம்

அறிவியல் விஷயங்களையும் அவ்வப்பொழுது இந்த வலைத் துணுக்கில் எழுத வேண்டும் என்ற ஆரம்பத்திலேயே ஆசைப்பட்டேன். இப்பொழுது இதை ஒரு தொடர் போல எழுதலாமா என்று யோசிக்கிறேன். இங்கே ஒன்றை சொல்லியாக வேண்டும். இந்த தொடர் எனது சொந்த தொடர் அல்ல. "சார்பியல் தத்துவம் என்றால் என்ன?" - லெ.லந்தாவு.யூ.ரூமர் எனற புத்தகத்தில் உள்ளதையே இதில் தரப் போகிறேன். ஆனாலும் புத்தகத்தில் உள்ள போரடிக்கும் சில விஷயங்களை தவிர்த்து தரப் போகிறேன். இனி தொடர்...

Sunday, February 12, 2006

சரணமும் பல்லவியும் - An Apology

Enakku nerame sariyillai. oru periya thappu paNNitten. Comment Moderation pannumbothu ellaa pinnuuttanggalaiyum check seythu vittu "publish"ai click pannuvathaRku pathil "Reject"ai click paNNivitten. pinnuttam itta anaivaridamum maNNippu keettuk koLkiReen. innum oru naaLil ungaL pinnuuttangaLai ellam mailil irunthu eduththu pathinthu vidukiRen. inRu mailboxum problem pannukiRathu(Time supera workout akuthu enna seyya?). anaivaraiyum konjam poRukkum padi keettuk koLkiReen. avasaraththukku ponguthamiz kuuda sariyaa open akalai. athaan aangilaththileeye thamizil type seythu vitten.

Saturday, February 11, 2006

சரணமும் பல்லவியும் (பாலா மன்னிக்கவும்)

வழக்கமா பாலாதான் இந்த வேலையை செய்வார். நாமளும் அதே மாதிரி ஒரு தடவை செய்யனும்னு ரொம்ப நாளா ஆசை. இன்னைக்கு அந்த ஆசையை தீர்த்துகிட்டேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள இடை வரிகளின் பல்லவியை கண்டுபிடியுங்கள்(முடிந்தால் பாடல்கள் இடம்பெற்ற படங்களின் பெயரையும்).


1) தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்கபோகமே.

2) தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே.

3) மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்.

4) பழியே புரியும் கொடியோன் புசிக்க, பாலும் பழமும் தன்னை தேடித்தரும்.

5) எச்சிலை தன்னிலே எறியும் சோற்றுக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே.

6) நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது.

7) அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது, ஆணவம் இன்றோடொழிந்தது.

8) அச்சடித்திருக்கும் காகிதப் பெருமை, ஆண்டவனார்க்கும் இல்லையடா.

9) கஞ்சி குடிப்பதற்கில்லா, அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லா

10) அன்னங்கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்.


அப்புறம் மேலேயுள்ள எல்லா பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றும் கண்டுபிடியுங்கள்.

Wednesday, February 08, 2006

கிரிப்ட்அரித்மெடிக்(Cryptarithmatic)

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இது போன்ற கேள்வி ஒன்றை இட்லிவடை மூலமாக அவரது பதிவில பதித்தேன். கீழே ஒரு கூட்டல் கணக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் 0விலிருந்து 9க்குள் ஒரு எண். ஒரு எழுத்துக்கு ஒரு எண்ணை கொடுத்துவிட்டால் வேறு எந்த எழுத்துக்கும் அதே எண்ணை கொடுக்க கூடாது. இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணை substitute(சரியான தமிழ் வார்த்தை சொன்னால் நலம்!) செய்யும் பொழுது கூட்டல் சரியாக வர வேண்டும். அந்த கூட்டலை கண்டுபிடியுங்கள்.

ONE
ONE
ONE
ONE
-------
TEN
-------

Wednesday, February 01, 2006

சில பழங்கள்....