Monday, November 24, 2008

காஸினோ

காஸினோக்களுக்கு எத்தனை பேர் போயிருக்கிறீர்கள்(அதாங்க, ஜூதாட்ற கிளப்பு). வெளிநாடுகளில் வசிப்பவர்களில் சிலர் போயிருக்கலாம். போகாதவகர்கள், அட்லீஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படத்திலாவது அந்த க்ளப்களை பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட சில க்ளப்களில் சீட்டாட்டங்களுக்காக சீட்டுக்களை கலைப்பதற்கு தனி மெஷின் இருக்கும்.

அப்படித்தான் ஒரு க்ளப்பில் ஒரு மெஷின் இருந்தது. அந்த மெஷின் ஒவ்வொரு முறையும் சீட்டுகளை ஒரே விதமாகத்தான் கலைக்கும். அதாவது உதாரணத்துக்கு, கலைப்பதற்கு முன் முதலாவதாக இருந்த சீட்டு, கலைத்தபின் ஐந்தாவதாக இருக்கும் என்று வைத்துக் கொண்டால், ஒவ்வொரு கலைப்பிலும் முதலாவதாக இருந்த சீட்டே ஐந்தாவது இடத்துக்கு வரும்.

இப்பொழுது ஒரு சீட்டுக் கட்டில் ஸ்பேட்(Spade) வகை சீட்டுக்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். அவை வரிசையாக A,2,3,4...10,J,Q,K என்று அடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 சீட்டுக்கள். இவற்றை அப்படியே அந்த மெஷினில் வைத்து கலைக்கிறோம். பின் மீண்டும், கலைந்த சீட்டுக்களை அப்படியே வைத்து, இன்னொரு முறை கலைக்கிறோம். இப்பொழுது சீட்டுக்களை வெளியே எடுத்துப் பார்த்தால், அவை 10,9,Q,8,K,3,4,A,5,J,6,2,7 என்ற முறையில் அடுக்கப்பட்டிருந்தது.

அப்படியென்றால் முதல் கலைத்தலுக்குப் பின், சீட்டுக்களின் வரிசை எப்படி இருந்திருக்கும்? கண்டுபிடிக்க முடியுமா?

Friday, November 07, 2008

ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி - சில விடைகள்

இந்தப் புதிர் எளிதுதான் என்பதால், பலவிதமான விளக்கங்கள் வந்து விட்டன. வெண்பூ புதிர் போட்ட சில நிமிடங்களிலேயே பைசா சகிதமாக கணக்கைத் தீர்த்துவிட்டார். நையாண்டி நைனா குத்து மதிப்பாக ஆரம்பித்து, அப்புறம் வித விதமாய் பிரித்து மேய்ந்தார்.

பலரும் 48 ரூபாய் சரிதான் என்று நிறுவுவதிலேயே கவனம் செலுத்தினர். ஐம்பது ருபாய் ஏன் வரவில்லை அல்லது ஐம்பது ரூபாய் வந்திருக்க என்ன செய்திருக்க வேண்டும் என்று சொன்னவர்கள் சிலரே. அதுவும் எனது தவறுதான். கேள்வியில் அதை நான் தெளிவாக கேட்கவில்லை. அதனால் ஒரு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்(வுடு, வுடு. இதெல்லாம் நமக்கு சகஜம்தானே).

விடையளித்து இருந்தவர்களில் சிலர் மிகத் தெளிவாக விளக்கியிருந்தனர். அதனால் அவர்களின் விளக்கங்களையே கொடுக்க விரும்புகிறேன்(சொந்தமா டைப் பண்ண எவ்வளவு சோம்பேறித்தனம்!).

முதலில் 48 ரூபாய் சரிதான் என்பதற்கு வந்த சில விளக்கங்கள் :

// ஜே கே J K said...
மொத்தம் - 120 கிலோ.

5 கிலோ 2 ரூ

2+3 அல்லது 3+2

அதாவது ஸ்டாலின் அரிசி 2 கி + அழகிரி அரிசி 3 கி அல்லது ஸ்டாலின் அரிசி 3 கி + அழகிரி அரிசி 2 கி.

இப்படி விற்க்கும் போது எதாவது ஒரு அரிசி 20 பேர்க்கு விற்றதும் முடிந்துவிடும். அப்போது காசு 40 ரூ இருக்கும். மீதமுள்ள 20 கி அரிசியை விற்றால் 8 ரூ கிடைக்கும். மொத்தம் 48 ரூபாய் தான்.
//

// புருனோ Bruno said...
//ஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.//

இல்லை. அந்த அரிசி வாங்கப்பட்டது ரூபாய் 30

விற்கப்பட்டது ரூபாய் 24க்கு (5 கிலோ
2 ரூபாய் என்றால் 60 கிலோ 24 ரூபாய்)

//தனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.//

இந்த அரிசியும் விற்கப்பட்டது
விற்கப்பட்டது ரூபாய் 24க்கு (5 கிலோ
2 ரூபாய் என்றால் 60 கிலோ 24 ரூபாய்)

எனவே 24 + 24 = 48

//

// SP.VR. SUBBIAH said...
ஸ்டாலின் (தனி விற்பனை): 60 கிலோ வகுத்தல் 2 கிலோ 30 units x ரூ1.00 = 30:00
ஸ்டாலின்: (கூட்டணி விற்பனை)60 கிலோ வகுத்தல் 5 கிலோ 12 units x ரூ2.00 = 24:00
----------------------------------------------------------------------------------------
நஷ்டம் 6:00
----------------------------------------------------------------------------------------
அழகிரி: (தனி விற்பனை)60 கிலோ வகுத்தல் 3 கிலோ 20 units x ரூ1.00 = 20:00
அழகிரி: (கூட்டணி விற்பனை) 60 கிலோ வகுத்தல் 5 கிலோ 12 units x ரூ2.00 = 24:00
----------------------------------------------------------------------------------------
லாபம் 4:00
-------------------------------------------------------------------------------------------
ஆக மொத்தம் 6:00 கழித்தல் 4:00 இரண்டு ரூபாய் காணமல் போய்விட்டது

//




நஷ்டம் எப்படி வந்தது/ஐம்பது ரூபாய் பெற என்ன செய்திருக்கலாம் என்று விளக்கியவர்கள் :


//வெண்பூ said...
ஸ்டாலின் அரிசி 60 கிலோ
அழகிரி அரிசி 60 கிலோ

மொத்தம் 120 கிலோ

ஒரு கிலோவின் விற்பனை விலை (ரூ0.40 => இரண்டு ரூபாய்க்கு 5 கிலோ)

மொத்த விலை 120 * 0.40 => ரூ 48

சரியாத்தான் இருக்கு.

:)))

ஒரு வேளை ஒரு கிலோ அரிசி ரூ 2 மற்றும் ரூ 3 என்றால் மொத்தமாக விற்கும்போது 2 கிலோ 5 ரூபாய் என்று விற்கலாம். ஆனால் 2 கிலோ ஒரு ரூபாய், 3 கிலோ ஒரு ரூபாய் என்றால் அதே அளவில் பணம் கிடைக்க ஒரு கிலோ (0.50 + 0.33333) / 2 = 0.4166... (அதாவது 41.6666.. பைசாவிற்கு) க்கு விற்றிருக்க வேண்டும் ஆனால் அவர் 1.6667.. பைசா குறைவாக 40 பைசாவிற்கு விற்றதால் ஒரு கிலோவிற்கு 1.6667 பைசா. மூன்று கிலோவிற்கு நஷ்டம் 5 பைசா, அதனால் 120 கிலோவிற்கு நஷ்டம் 2 ரூபாய்)

சரியா?
//

// நையாண்டி நைனா said...
1 ரூபாய்க்கு 2 கிலோ அரிசி எனும் போது, ஒரு கிலோ அரிசி அரை ரூபாயும் அரை கிலோ அரிசி கால் ரூபாயும் ஆகிறது.
1 ரூபாய்க்கு 3 கிலோ அரிசி எனும் போது ஒரு கிலோ அரிசி 0.333333333333333333333 ரூபாயும் அரை கிலோ அரிசி 0.1666666666666667 என்றும் ஆகிறது.



இப்போது அவரின் 5 கிலோவில் 2.5 கிலோ, 2 ரூபாய் அரிசியும் 2.5 கிலோ 3 ரூபாய் அரிசியும் இருக்கும்போது
அதனுடைய விலை (5/2*1/2) + (5/2*1/3) அதாவது. (25/12) ரூபாய் ஆகிறது
ஆனால் அவர் வைத்துள்ள விலையோ 2 ரூபாய்.
இங்கே
(25/12) > 2
ஆக அவருக்கு
(25/12 -2 ) ரூபாய் நட்டம் ஆகிறது. ஒரு 5 கிலோ விற்பனையில்.

அவரிடம் 120 கிலோ உள்ளது. அதாவது 24, 5 கிலோ உள்ளது. அதாவது 24 முறை நட்டம் அடைகிறார்
ஆக மொத்த நட்டம்
=(25/12-2)*24
=((25-24)/12)*24
=2
அதுவே அந்த 2 ரூபாய் ஆகும்

இந்த விளக்கம் போதுமா....?????

( இதை முடித்து திரும்பினால்... என் பின்னால், என் மேலாளர், நற...நற.. .)
//


// Amar said...
விற்றிருக்க வேண்டிய விடை: 2.083

கிலோ அரிசி Rs 0.50க்கும் உள்ளது Rs 0.33333க்கும் உள்ளது.

ஆதலால் ஒரு கிலோவின் நிகர விலை
0.50000 +
0.33333
--------
0.83333 /
2
--------
0.41665 = ஒரு கிலோ அரிசியின் நிகர விலை

0.416665
5
--------
2.083325
--------

என்ன சரியா யோசிப்பவரே?
//


// தகடூர் கோபி(Gopi) said...
யோசிப்பவர்,

ஸ்டாலின் அரிசியை ரெண்டு ரெண்டு கிலோவா பிரிச்சி கட்டினா 30 பை வரும்.

அழகிரி அரிசியை மூனு மூனு கிலோவா பிரிச்சி கட்டினா 20 பை தான் வரும்.

ரெண்டையும் கலந்து ஐந்து கிலோ கட்டு கட்டினால் 24 பை வரும்.

அதாவது அழகிரி குடுதத அளவை விட 4 பை அதிகமா அவர் விலைக்கு விற்கப்படுது. அதை சரி கட்ட ஸ்டாலினோட கணக்குல 6 பை குறையுது. அதாவது அவரோட 6 பையை அழகிரியின் 4 பை விலைக்கு வித்திருக்காரு. அதாவது 6 ரூபாய்க்கு பதிலா 4 ரூபாய். அதான் அந்த 2 ரூபாய் நஷ்டம்..

என்ன ரொம்ப குழப்பிட்டேனா?
//



நான் எதிர்பார்த்த விடை தகடூர் கோபியிடமிருந்து வந்தது :


// தகடூர் கோபி(Gopi) said...
//ஐம்பது ரூபாய் கிடைத்திருக்க வேண்டுமென்றால், எப்படி விற்றிருக்க வேண்டும்//

ஐந்து ஐந்து கிலோவா 20 பையை கட்டி வித்துடனும். 40 ரூபாய் கிடைக்குமா?

மீதி இருக்குற 20 கிலோவை

1)ரெண்டு ரெண்டு கிலோவா கட்டி ஸ்டாலின் விலைக்கு வித்தா 10 ரூபாய்.
2) ஐந்து ஐந்து கிலோவா கட்டி மொத்தம் 4 பை.. ஒரு பை 2ரூபாய்ன்னு விக்கறதுக்கு பதிலா 2.5 ரூபாய் (கடைசி இல்லையா.. டிமாண்டு அதிகமாகி விலை ஏறிப்போயிடுச்சி) போட்டு விக்கலாம். அப்பவும் 10 ரூபாய் கிடைக்கும்


இல்லையா.. மொதல்ல இருந்தே ஐந்து கிலோ ரூ 2.0833333333 க்கு விக்கலாம்.

ஆக மொத்தம் கடைசியில 50 ரூபாய் கிடைச்சதா.
//


பங்கேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள். சிலரின் பெயர்கள்/பின்னூட்டங்கள் குறிப்பிட விட்டுப் போயிருக்கலாம். அதுக்காக கோபப்படாதீங்க மக்காள்ஸ்!!:-)

Wednesday, November 05, 2008

ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி

முன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல!!!!!!!!!

ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற விலையில் விற்கிறார். அழகிரி தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 3 கிலோ என்ற விலையில் விற்கிறார்.

ஒரு நாள் இருவரிடமும் தலா 60 கிலோ அரிசி இருக்கிறது. ஆனால் அன்றைக்கு ஸ்டாலினால் வியாபாரத்துக்கு போக முடியவில்லை. அதனால், தன்னிடமுள்ளதை அழகிரியிடம் ஒப்படைத்து, அதையும் தனக்காக சந்தையில் விற்று வரும்படி கூறுகிறார்.

ஸ்டாலின் விற்கும் விலை அழகிரிக்குத் தெரியுமாதலால், ஸ்டாலினுக்கு 30 ரூபாயை கொடுத்துவிட்டு அரிசியை வாங்கிக் கொள்கிறார். சந்தையில் விற்கும்பொழுது அழகிரி வழக்கம் போல விற்காமல், இரு அரிசிகளையும் கலந்து, இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ அரிசி வீதம் விற்றுத் தீர்த்தார். கணக்குப் பார்த்தார்.

ஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.
தனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.

ஆனால் அவர் கையில் 48 ரூபாய்தான் இருந்தது. இரண்டு ரூபாயை எங்கே, எப்படி கோட்டை விட்டார் அழகிரி?

பின்குறிப்பு : இது ஒரு அக்மார்க் புதிர் கணக்கு. நீங்கள் நுண்ணரசியலையெல்லாம் தேடினால், நான் பொறுப்பல்ல!!!