Tuesday, July 15, 2008

வட்டமேஜை கொள்ளையர்கள

ஒரு வட்ட மேஜையில் நான்கு பேர் அமர்ந்துள்ளனர். அதில் ஒருவன் திருடன், ஒருவன் தாதா, ஒருவன் கொலைகாரன், மற்றொருவன் கடத்தல்காரன். இவர்களில் இருவர் மட்டுமே உண்மையான குற்றவாளிகள். மீதி இருவர் அவர்களை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் வந்துள்ள சிஐடி ஆபீசர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு நால்வரும் யார் யார் என்பதையும் அவர்கள் எவ்வாறு அமர்ந்துள்ளனர் என்பதையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


1. காளியும் கமலும் குற்றவாளிகள்.

2. காளி தாதாவிற்கு எதிரில் அமர்ந்துள்ளான்.

3. சிஐடி வெங்கி திருடனுக்கு இடதுபக்கம் உள்ளார்.

4. சிஐடி மங்கி கொலைகாரனுக்கு எதிரில் இருக்கிறார்.

5. சிஐடி மங்கி திருடன் கிடையாது.

Monday, July 07, 2008

பூமிக்கு ஒரு பெல்ட்

பூமி கோள வடிவில் இருக்கிறது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். உண்மையில் அது மிகச் சரியான கோளம்(Perfect Sphere) கிடையாது. பள்ளங்களும் மேடுகளாமாய்த்தான் உள்ளது. கணக்கிற்காக அது மிகச் சரியான கோளமாய் இருக்கிறது எனக் கொள்வோம். அந்த பூமிக் கோளத்தை சுற்றி, தரையோடு தரையாக எஃகினாலான ஒரு பெல்ட் அமைக்கிறோம். இப்பொழுது அந்த பெல்டை வெட்டியெடுத்து, அதன் நீளத்தில் சரியாக ஒரு அடி மட்டும் கூட்டுகிறோம். இப்பொழுது பெல்டை மறுபடியும் பூமியின் தரையிலிருந்து சமமான தூரத்தில் அமைத்தோமானால், தரைக்கும் பெல்ட்டுக்கும் இடைவெளி எவ்வளவு இருக்கும்? இதே செய்முறையை பூமிக்கு பதில் நிலவை வைத்து செய்தால், அப்பொழுது இடைவெளி எவ்வளவு இருக்கும்?

பி.கு : படத்துக்கும் கேள்விக்கும் சம்பந்தம் இல்லை!!:-)