Monday, September 29, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - போT

போன மாதம் கொத்ஸை தொடர்ந்து நாமும் குறுக்கெழுத்துப் போட்டோம். ஆனா சரியா வரலை. ஆனாலும் தன்னுடைய முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல இந்த மாதமும் புதிரை உருவாக்கிட்டேன். போன முறை செய்ததில் தவறு என்று தோன்றியவைகளை இந்த முறை சரி செய்திருக்கிறேன். கேள்விகள், விடைகள் இரண்டுமே எளிதாக இருக்கும்படியே புதிரை அமைத்திருக்கிறேன்.

அப்புறம் கொத்ஸ் இந்த மாதம் மதிப்பெண் வேறு போட்டு விட்டாரே. அதையும் காப்பியடிக்காவிட்டால் எப்படி என்பதால், விடை சொன்னவர்களுக்கான மதிப்பெண்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்(போன தடவை ஒரே ஒருத்தர்தானே பதில் சொன்னார்! ஒருத்தருக்காக ஒரு லிங்க்கா?!).

டிஸ்கி - 3:
மரியாதையாக நான்கைந்து பேராவது பதில் சொல்லனும். அப்படி சொல்லலைன்னா, அடுத்த மாதமும் புது கு.எ.புதிர் போடுவேன். நாலைந்து பேராவது பதில் சொன்னால் இந்த மாதத்தோடு நிறுத்தி கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்!!

இப்ப புதிரைப் பார்க்கலாம்



1348
25
6
97
191611
1810
1713
151412


இடமிருந்து வலம் :

2) விழியருகில் இதயத்துடிப்பின் ஓசை மாறினால் தெளிவாகத் தெரியும்.(4).
3) மாமாவை ஒருமுறை ஆகாரமில்லாமல் ஆறுதல் செய்தால் மாற்றம் வரும்.(4)
6) பணிவின் ஸ்வரத்தை மாற்றி முட்டையை உடைத்தால் இரக்கம் பிறக்கும்.(3)
11) வகையின் கையுடைத்து உள்ளுடையில் அடைந்திருப்பது மறுபாதி வடிவமானால் தமிழ்மறை.(5)
17) பல்லியின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2)


மேலிருந்து கீழ் :

1) சுழிகள் நிறைந்த கன்னி விஷயத்தில் நஞ்சை அகற்றினால் கௌரவம்.(5)
3) மடி மீது கால் வைத்து ஏறிப் போ.(2)
4) தற்கொலையின் அடிமுடியை ஆராய்ந்தால் சிரம் தனியே வந்துவிடும்.(2)
8) ஞானத்தின் ஒரு கரை வரை அடைய இது வழிகாட்டும்.(4)
16) மீசையை திருப்பி விட்டுத் திரித்து கோபத்தில் அரசனை விரட்டியதால் அண்மையில் கிடைத்தது.(4)
19) உயர்ந்தோர் தரச்சொல்லி அழுக்கின் சோகம் அகற்றி துன்புறுத்தும் உறுப்பு.(4)


வலமிருந்து இடம் :

5) வதக்க ஆரம்பித்து காலையில் பறவையை விரட்டினால் மீனைப் பிடிக்கலாம்.(2)
9) கரகத்தின் இடையில் சில சில சமயம் முடிந்தால் மறைக்கப்படும்.(5)
13) சாலையின் ஒரு ஓரத்தில் குரங்கு வந்தால் மணக்கும்.(4)
14) அங்குசமின் முனையில் அங்கதனின் இடையை சொருகினால் வெட்டிக் கூட்டம்.(4)
18) ஆட்டுத் தலைக்கு பதில் மீன் தலையை வைத்து வீணையை வாசி.(3)


கீழிருந்து மேல் :

7) கவலையின் காலை உடைத்து காதலின் தலையை வெட்டி உள்ளே நுழைத்தால் செய்தி தரும்.(4)
10) அவள் மருவி மனைவி என்பது தெய்வப்பிறவி.(5)
12) உட்காராததால் மலைமகள் கண்மண் தெரியாமல் நதியாக ஓடுகிறாள்.(5)
14) பதியின் சரி பாதி இவள்.(2)
15) மிச்சம் விழுந்ததை கழித்து எடுத்தால் அடிப்பான்.(2)


இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

Thursday, September 18, 2008

உண்மையைத் தேடி

இன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு யோசிங்கவில் கேட்ட "ஒரே ஒரு ஊர்ல" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.

உங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அந்த இருவரில் யாராவது ஒருவரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்கள். அதன் மூலம் யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்று கண்டு பிடிக்க வேண்டும். அப்படியானால் உங்களது கேள்வி என்னவாக இருக்கும்? (ஒரு கேள்விதான் அலவ்டு!!)

வெண்பூ சுட்டிக் காட்டியதால் புதிரில் சின்னத்(?!) திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா?! தாங்கலைப்பா!)


தொடர்பில்லாத குறிப்பு : இந்தப் புதிர் கொஞ்சம் எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள், பயங்கர கஷ்டமான புதிரை படிக்க விரும்புகிறீர்களா? இங்கே செல்லவும். அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென்பதால், நான் முயற்சி செய்யவில்லை(எஸ்கேப்பு)!

Wednesday, September 17, 2008

வெட்டி

எனது அறைக்குள், எங்கள் VP திடீரென்று நுழைந்ததை நான் கவனிக்கவில்லை. எனது கணிணித் திரைக்குள், கொத்ஸின் குறுக்கெழுத்தில் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தபொழுது, திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினால், அருகில் நின்று கொண்டிருக்கிறார். திரையை மூட சமயம் வாய்க்கவில்லை. பார்த்திருப்பார்!

இருந்தாலும் கண்டுக்காதது போல் வந்த வேலையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பேசிக்கொண்டே, நைஸாக கு.எ. ஐ மூடி வைத்தேன். அவர் போன பின்பு அவர் கொடுத்த வேலை வேலைக்காகாது என்று தெரிந்தது. அதனால் அவரிடம் நேரிடையாகவே அதைப் பற்றி சொல்லிவிடலாம் என்று அவர் அறைக்குச் சென்றேன்.

சிங்கம் பிஸியாக லேப்டாப்புக்குள் மூழ்கியிருந்தது. குரல் கொடுத்துவிட்டு இயல்பாக உள்ளே நுழைந்தேன். இப்பொழுது அவர் கணிணித் திரை தெரிந்தது. அவரும் சிறிது சங்கடத்துடன், திரையில் விரிந்திருந்த சாலிட்டரை மூடிவிட்டு, "என்னப்பா?" என்றார்.

"அடப்பாவி! நீங்களுமா?!" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்!?!

Monday, September 08, 2008

கருவிப் பட்டை பலமுறை தெரியும் பிரச்சினைக்குத் தீர்வு

தமிழ் மணம் கருவிப்பட்டை பிளாக்கரில் பலமுறை தெரியும் பிரச்சினை பல பிளாக்களில் இருக்கிறது. அவற்றை சரி செய்யும் விதமாக, பட்டையை இணைக்கும் நிரலியில் சில மாறுதல்கள் செய்து தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து தமிழ் சசியிடமிருந்து மடல் கிடைத்ததற்கான மறுமொழி வந்தது. நானும் அதை தமிழ்மணம் கருவிப்பட்டை இணைக்கும் பக்கத்தில் செயல்படுத்துவார்கள் என்று காத்திருந்தேன். மேலும் பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒன்றும் நடப்பதாக அறிகுறியில்லை. சரி,இது வேலைக்காகாது, நாமே வலையேற்றினால்தான் உண்டு என்று முடிவு செய்து வலையேற்றிவிட்டேன். முதலில் இந்தப் பதிவிலேயே, அந்த நிரலியை செயல்படுத்த முனைந்தேன். javascript பிளாக்கரில் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் அதை தனிப் பக்கமாக வலையேற்றியிருக்கிறேன். உங்கள் பிளாக்கர் வலைப்பதிவில், பலமுறை கருவிப்பட்டைத் தெரியும் பிரச்சினை இருந்தால், அதை நீங்கள் இங்கே சென்று சரி செய்து கொள்ளலாம்.

சுட்டி :- http://karuvipattai.freevar.com/