Saturday, December 30, 2006

அறுவை - 2

இப்ப நம்ம குக்கிராமத்து மருத்துவமனைக்கு, அரசாங்கம் மேலும் இரண்டு சர்ஜன்களை வேலைக்கமர்த்தியது. சிறிது நாட்களுக்கு பிறகு அந்த கிராமத்தில் மீண்டும் ஒரு கோர விபத்து நடந்தது. நடந்து சென்று கொண்டிருந்த ஒருவனை ஒரு கார் அடித்து சென்று விட்டது. அந்த ஆளுக்கு பயங்கர அடி. அவனை நமது மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அவனை பரிசோதித்த நமது மருத்துவர்கள், அவனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அறுவை சிகிச்சைகள் செய்தால்தான் பிழைப்பான் என்று முடிவு செய்தார்கள். அந்த மூன்று அறுவைகளையும் ஒருவரே செய்ய முடியாது. ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு அறுவை செய்யத்தான் தெரியும். அதாவது முதல் மருத்துவருக்கு முதல் அறுவை, இரண்டாமருக்கு இரண்டாவது அறுவை, இப்படி... ஆக மூவருமே அவனுக்கு ஒருவர் பின் ஒருவராக அளுக்கு ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டும்.

மீண்டும் பற்றாக்குறை! இரண்டே இரண்டு ஜதை கையுறைகள்தான் இருந்தன. நமது பழைய சர்ஜன் இப்பொழுதும் சிறிது யோசனை செய்துவிட்டு, ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி மூவரும், அடிபட்டவனுக்கு பாதுகாப்பான முறையில் மூன்று அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக செய்து முடித்து அவனை காப்பாற்றினர்.

இப்பொழுது கையுறைகளை எப்படி உபயோகப்படுத்தினர்? விளக்க முடியுமா?

Thursday, December 28, 2006

அறுவை புதிர்

ரயில் புதிர் கேட்டு கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகப் போகிறது. அதனால் அடுத்ததும் கொஞ்சம் கஷ்டமான புதிர்தான்.

அது ஒரு குக்கிராமம். அங்கே ஒரு சின்ன(ரொம்ப சின்னது!) மருத்துவமனை. ஆனா அங்கே இருந்த டாக்டர் ஒரு சர்ஜன். ஒரு வாரத்துக்கு ஒரு முறை பக்கத்து ஊரிலிருந்து, மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார். இதனால் மருத்துவமனையில் அடிக்கடி பற்றாக்குறை ஏற்படுவதுண்டு.

ஒரு வெள்ளிகிழமை, நம்ம சர்ஜனுக்கு சோதனையாக, கிராமத்தில் ஒரு பெரிய விபத்து நடந்தது. ஒரு வேனும் காரும் மிக பயங்கரமாக மோதியதில், கார் டிரைவர், ஓனர், வேன் டிரைவர் மூவருக்கும் சரியான அடி. மூவரையும் நமது சின்ன மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அவர்களை பரிசோதித்த நமது சர்ஜன் மூவருக்கும் அவசரமாக ஒரு சின்ன ஆப்பரேஷன் செய்தால்தான் பிழைப்பார்கள் என்று உணர்ந்தார். இப்பொழுது ஒரே ஒரு பிரச்சனைதான். அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் மொத்தம் இரண்டே இரண்டு ஜதை கையுறைகள்தான் இருப்பிலிருந்தன. இரண்டு ஜதை கையுறைகளை வைத்துக் கொண்டு எப்படி மூன்று பேருக்கு ஆப்பரேஷன் செய்வது? சிறிது நேரம் யோசித்த நமது சர்ஜன், ஒரு முடிவிற்கு வந்தவராக, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மூவருக்கும் வெற்றிகரமாக அறுவையை முடித்து, அவர்கள் உயிரை காப்பாற்றினார். இதில் முக்கியமான விஷயம் அவர் யாருக்கும் பாதுகாப்பற்ற முறையில் ஆப்பரேஷன் செய்யவில்லை. மூவருக்குமே பாதுகாப்பான முறையில்தான் ஆப்பரேஷன் செய்தார். அதே சமயம் தனக்கும் எந்த விதமான கிருமிகளின் பாதிப்பும் இல்லாதபடி பார்த்து கொண்டார். கையுறை இல்லாமலும் அவர் யாருக்கும் அறுவை செய்யவில்லை. அப்படியானால் இரண்டே இரண்டு ஜதை கையுறைகளை வைத்து கொண்டு எப்படி மூன்று பேருக்கு பாதுகாப்பான முறையில் அறுவை செய்தார்?

கொஞ்சம் விளக்குங்கள்!!!

Friday, December 22, 2006

சில தவறுகள்! சில திருத்தங்கள்!!!






Wednesday, December 13, 2006

ரயிலே ரயிலே... - விடை

ரயிலோட நீளம் 'L'னு வச்சுக்குவோம். ரயிலோட வேகம் 'S'னு வச்சுக்குவோம். சூர்யா/ஜோதிகா நடக்கிற வேகம் 'X'. ரயில் சூர்யாவ கிராஸ் பண்ணறதுக்கு 10 செகண்ட் ஆகுது. அதே ஜோதிகாவ கிராஸ் பண்ண 9 செகண்ட். அப்ப ரயிலோட வேகம்

S = (L+10X)/10 = (L-9X)/9.

இந்த ரெண்டு சமனிகளிலிருந்து(சரியான தமிழ் வார்த்தைதானா?!?!) நமக்கு கிடைப்பது

L = 180X
&
S = 19X.

இப்ப ரயிலோட கடைசிப் பெட்டி சூர்யாவ கிராஸ் பண்ணினதற்கப்புறம், அந்த ரயிலோட முகப்பு ஜோதிகாவ ரீச் பண்ணுது. அப்ப இருபது நிமிஷத்துல அந்த ரயிலோட முகப்பு கடந்த தூரம் = (1200S+L).

அதே இருபது நிமிஷத்துல சூர்யா நடக்கிற தூரம் = (1200X).

இப்ப ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள தூரம் = (1200S+L-1200X).

இதில் முன்னாடி கண்டு பிடிச்ச Sஓட மதிப்பையும், Lஓட மதிப்பையும் போட்டா,

(1200(19X)+180X-1200X) = 21780X.

இந்த தூரத்தை கடக்க ரெண்டு பேருக்கும் தேவை(ரெண்டு பேருமே நடக்கிறாங்க!),

21780X/2X = 10890 வினாடிகள். அதாவது 3 மணி நேரம், 1 நிமிடம், 30 வினாடிகள்.

அப்படின்னா சூர்யாவும், ஜோதிகாவும் சேரும்போது நம்ம வால் கிளாக் "ஒரு மணி நாற்பத்தி ஓரு நிமிஷம், 30 செகண்ட்"னு காட்டும்.

ஒரு மாதிரியா புரிஞ்சிரும்னு நினைக்கிறேன்!!!;)