Saturday, October 24, 2009

குறுக்கெழுத்துப் போT - 5

Hello everybody,
இந்த மாத குறுக்கெழுத்து புதிரை தீபாவளி ரிலீஸாக வெளியிட நினைத்தேன். ஆனால், அதிகப்படியாக வந்திருந்த ஸ்வீட், காரத்தால் (பூங்கோதை, பார்த்தசாரதி, இலவச கொத்தனார்) ஒரு வார தாமதம் ஏற்பட்டுவிட்டது. Just ஒரு வாரம் தான்! பொங்கல் ரிலீஸ் என்று ஆகவில்லையே!

வெல், அடுத்தடுத்து குறுக்கெழுத்து solve பண்ணி fed up ஆகியிருப்பீர்களோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வால் இம்முறை புதிரை சற்று எளிதாகவே அமைத்துள்ளேன்.

இது போன்ற குறுக்கெழுத்து புதிரை அவிழ்ப்பதற்கு திரு. வாஞ்சி அவர்களின் எளிய அறிமுகம் இங்கே! வழக்கம் போல மதிப்பெண் பட்டியல் இங்கே.

இனி புதிருக்கான கட்டவலையும், குறிப்புகளும் . . . . . .

1
234
5






67
8







910

11



1213
14





15
16
1718







19


குறுக்காக :

2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்கள் புனைந்தார்? (6)
6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா? (5)
8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான். (4)
9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது. (4)
12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே. (4)
16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது. (4)
17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள். (5)
19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம். (6)

நெடுக்காக :

1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள். (4)
3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி. (3)
4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம். (6)
5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி. (4)
7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை. (3)
9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது. (2)
10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன். (6)
11) கோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும். (2)
13) பாபம் மாற்றிய புண்ணிய நதி. (3)
14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன். (4)
15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான். (4)
18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே. (3)

Thursday, October 15, 2009

எண் என்ப... - விடை

142857

இந்த எண்ணில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? 1லிருந்து 7யை வகுத்தால் கிடைப்பது

1/7 = 0.142857142857142857.....

= 0.142857

இது மட்டுமல்ல!

1/7 = 0.142857142857....
2/7 = 0.285714285714....
3/7 = 0.428571428571....
4/7 = 0.571428571428....
5/7 = 0.714285714285....
6/7 = 0.857142857142....

அனைத்து விடைகளிலும் அதே ஆறு எண்கள் அதே வரிசையில் மீண்டும் மீண்டும் வருவதை கவனியுங்கள்!

எண் 7 க்கு பிறகு இந்த சிறப்பை பெறும் அடுத்த எண் 19. ஆம்! 1/19, 2/19, 3/19, .... , 18/19 விடைகளில் புள்ளிக்கு (decimal) பிறகு 18 எண்களை எழுதுங்கள். இங்கும் அதே வரிசையில் அதே வித பண்போடு எண்கள் மீண்டும் மீண்டும் வருவதை காண்பீர்கள்!!

மேலும் இந்த பண்பை பற்றி தெரிய விரும்புபவர்கள் primitive roots for prime numbers பற்றி படியுங்கள்.

- ஸ்ரீதேவி.

Thursday, October 08, 2009

எண் என்ப...?!

அரிச்சுவடியில் ஆரம்பிக்கும் எண்களின் ஆர்ப்பாட்டம், ஆயுள் வரை நீடித்தாலும், சில எண்கள் மட்டும் கவர்ச்சிகரமாய் அமைந்து விடுகிறது. இத்தகைய எண்களை கண்டுபிடித்ததாலேயே ராமானுஜம் உலகப்புகழ் பெற்றார்.

இப்பொழுது நீங்கள் கண்டுபிடிக்கப்போகும், இந்த ஒன்பதால் வகுபடும் ஆறு இலக்க எண்ணும் பிரபலமான ஒன்றுதான். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

1. அனைத்து இலக்கங்களும் வேறு வேறு எண்களால் ஆனது.
2. இரண்டாம் இலக்கத்தையும் மூன்றாம் இலக்கத்தையும் பெருக்கினால் நான்காம் இலக்கம் வரும்.
3. ஐந்தாம், மூன்றாம் இலக்கங்களை கூட்டினாலும், நான்காம் இலக்கத்திலிருந்து முதல் இலக்கத்தை கழித்தாலும் ஆறாவது இலக்கம் வரும்.

எனில் அந்த ஆறு இலக்க எண் எது?

முடிந்தால் அந்த எண் ஏன் சிறப்பு வாய்ந்தது என்றும் கண்டுபிடியுங்கள்!!!


- ஸ்ரீதேவி.

Friday, October 02, 2009

குறுக்கெழுத்து போT - 4 விடைகள்

இந்த முறை விடை சொன்னவர்கள் மிக மிக குறைவுதான்(மொத்தமே 5 பேர்தான்). ரொம்ப கஷ்டமாக இருந்ததா? இல்லை இதெல்லாம் ஒரு புதிர்னு சொல்லி லூஸ்ல விட்டுட்டீங்களான்னு தெரியவில்லை.

விடை சொன்ன அந்த 5 பேர் :

1) வாஞ்சிநாதன்
2) வீ.ஆர். பாலகிருஷ்ணன்.
3) குன்னத்தூர் சந்தானம்
4) பூங்கோதை
5) அரசு

இதில் எல்லாவற்றுக்கும் சரியான விடையளித்தவர்கள் பாலகிருஷ்ணனும், பூங்கோதையும்.

குறுக்காக

1. சொக்காய் - மதுரை மன்னனை நிறைய பேர் பாண்டியன் என்று நினைத்து குழம்பிவிட்டார்கள். குழம்ப வேண்டும் என்றுதான் கொடுத்திருந்தோம். பலரும் சொக்கா’வா’ என்றே விடை சொன்னார்கள். அழைத்தாய் இறுதியாக என்று கொடுத்திருந்ததால் சொக்காய் என்பதே சரியான வார்த்தை. இருந்தாலும் ’சொக்காவா’க்கும் மதிப்பெண் கொடுத்தோம்.

3. அரோகரா - கந்தன் புகழ் பாடு என்று கொடுத்திருக்க வேண்டும். தவறை சுட்டிக் காட்டிய வாஞ்சிக்கு நன்றி. ஆனாலும் எல்லோரும் கண்டுபிடித்து விட்டார்கள். துருவ ஒளி - அரோரா - வட/தென் துருவங்களில் மட்டும் பனிப்பரப்பினால் இயற்கையாக தோன்றும் வண்ண ஒளி.

7. சிந்தாமணி - எளிய குறிப்புதான். விரும்பியது கொடுக்கும் மணி - சிந்தாமணி.

8. தாழி - ’த’கரம் + கடல் (ஆழி) . குழம்புவீர்கள் என்று நினைத்தோம். ம்ஹும். நீங்களாவது குழம்புவதாவது.

9. வெண்ணை உருண்டை - கருணை குறைவாய் என்பது ’க’ இல்லாமல் ருணை என்பதை குறிக்கிறது. இதனுடன் ’வெண்டை உண்’ என்பதில் உள்ள எழுத்துக்களை கலக்கினால் கண்ணனைக் கவரலாம். இதிலும் ஒரு பிழை உண்டு. ’வெண்ணெய்’ என்பதே சரியான வார்த்தை. இனி கவனமாக இருக்க வேண்டும்.

10. மீறி - ’மீன் வலையைப் பற்றி’ என்பதன் முதல் கடைசி எழுத்துக்கள் சேர்ந்து அடங்காமல் போனது.

12. விண்கலமா - ’கவி மாலன்’ முட்டை அதிகம் உண்டால் கவி மால’ண்’ ஆவார். அவர் குழம்பினால் வேற்றுக் கிரகம் போவார்.

14. துந்துபி - பேரிகை என்ற க்ளுவிற்கு பதில் அறுபது தமிழ் வருடங்களில் ஒன்று என வரும்படி கொடுக்கலாம் என்று நினைத்தோம். பிறகு வாக்கிய அழகிற்காக மாற்றி விட்டோம்.

15. மிதியடி - இந்த க்ளு எனக்கே பிடித்திருந்தது. சேது நாயகன் என்ற வார்த்தைக்கு விக்ரமிடமிருந்து விலகி, ராமர் என்று யோசித்தால் எளிதில் கண்டு பிடித்திருக்கலாம். அதையும் மூன்று பேர் சரியாக யோசித்துள்ளனர்.


நெடுக்காக

1. சொடக்கு - ஆங்கில வாத்தை டக் என்று எளிதில் விடுவித்து விடுவீர்கள் என்று தெரிந்தே தான் கொடுத்தோம்.

2. காஞ்சி - சத்தியமாக நூற்றாண்டு விழா பாதிப்பில் தமையனை அழைக்கலீங்க! அது சரி . . . ’ஏப்ரல் மே யில...’ பாடல் க்ளுவில் தெரியவில்லையா?!?

4. ரோகிணி - அவ’ரோ’+ மணியோசை = ’கிணி’. சோதிட ஸாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவியர். அவர்களில் சந்திரனுக்கு மிகவும் பிரியமான மனைவி ரோகிணி.

5. ராக்கோழி - மீண்டும் ஆங்கில என்று உபயோகிக்க எங்களுக்கே விருப்பமில்லைதான். என்ன செய்ய? ராக் தமிழ் வார்த்தை கிடையாதாமே?

6. பாதாள உலகம் - மிக எளிதான் குறிப்புதான். விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறோம்.

8. தாடை - க்ளுவை டைப்பியதும் எங்களுக்கே முகம் கிழிந்து விட்டது போல ஒரு உணர்வு! நீங்கள் யாரும் கிழித்து விடுவீர்களோ என்ற பயமும் கூட!!

9. வெறி - ஆக்ரோஷமாக என்று கொடுக்கலாமா என நினைத்தோம். எப்படி கொடுத்திருந்தாலும் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று தெரிந்து விட்டதால் விட்டு விட்டோம் ( எல்லாம் உங்க புத்திசாலித்தனத்தில் மேல் நம்பிக்கைதான் )

10. மீந்தது - கொஞ்சம் கஷ்டப்பட்டீர்களோ? அந்த முண்டத்தில் - ந்த என்று பிடித்திருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள்.

11. அம்மாடி - இந்த விடை தான் எண்ணியிருந்தோம். ஆனால் போஸ்ட் பண்ணிய பிறகு தான் ஆத்தாடி என்பதும் சரியாக வருவதை தெரிந்து கொண்டோம். ஆனாலும் விடை சொன்ன அனைவரும் அம்மாடி என்றே கூறியிருந்தது மகிழ்ச்சியளித்தது.

12. வித்து - ஆதி மூலம் இடையில் கமா போட்டிருக்க வேண்டாமோ?

13. மாருதி - சுதந்திரம் <=> விடுதலை. சுதந்திர சிறுத்தை <=> ?!

- ஸ்ரீ தேவி