Monday, September 29, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - போT

போன மாதம் கொத்ஸை தொடர்ந்து நாமும் குறுக்கெழுத்துப் போட்டோம். ஆனா சரியா வரலை. ஆனாலும் தன்னுடைய முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல இந்த மாதமும் புதிரை உருவாக்கிட்டேன். போன முறை செய்ததில் தவறு என்று தோன்றியவைகளை இந்த முறை சரி செய்திருக்கிறேன். கேள்விகள், விடைகள் இரண்டுமே எளிதாக இருக்கும்படியே புதிரை அமைத்திருக்கிறேன்.

அப்புறம் கொத்ஸ் இந்த மாதம் மதிப்பெண் வேறு போட்டு விட்டாரே. அதையும் காப்பியடிக்காவிட்டால் எப்படி என்பதால், விடை சொன்னவர்களுக்கான மதிப்பெண்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்(போன தடவை ஒரே ஒருத்தர்தானே பதில் சொன்னார்! ஒருத்தருக்காக ஒரு லிங்க்கா?!).

டிஸ்கி - 3:
மரியாதையாக நான்கைந்து பேராவது பதில் சொல்லனும். அப்படி சொல்லலைன்னா, அடுத்த மாதமும் புது கு.எ.புதிர் போடுவேன். நாலைந்து பேராவது பதில் சொன்னால் இந்த மாதத்தோடு நிறுத்தி கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்!!

இப்ப புதிரைப் பார்க்கலாம்



1348
25
6
97
191611
1810
1713
151412


இடமிருந்து வலம் :

2) விழியருகில் இதயத்துடிப்பின் ஓசை மாறினால் தெளிவாகத் தெரியும்.(4).
3) மாமாவை ஒருமுறை ஆகாரமில்லாமல் ஆறுதல் செய்தால் மாற்றம் வரும்.(4)
6) பணிவின் ஸ்வரத்தை மாற்றி முட்டையை உடைத்தால் இரக்கம் பிறக்கும்.(3)
11) வகையின் கையுடைத்து உள்ளுடையில் அடைந்திருப்பது மறுபாதி வடிவமானால் தமிழ்மறை.(5)
17) பல்லியின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2)


மேலிருந்து கீழ் :

1) சுழிகள் நிறைந்த கன்னி விஷயத்தில் நஞ்சை அகற்றினால் கௌரவம்.(5)
3) மடி மீது கால் வைத்து ஏறிப் போ.(2)
4) தற்கொலையின் அடிமுடியை ஆராய்ந்தால் சிரம் தனியே வந்துவிடும்.(2)
8) ஞானத்தின் ஒரு கரை வரை அடைய இது வழிகாட்டும்.(4)
16) மீசையை திருப்பி விட்டுத் திரித்து கோபத்தில் அரசனை விரட்டியதால் அண்மையில் கிடைத்தது.(4)
19) உயர்ந்தோர் தரச்சொல்லி அழுக்கின் சோகம் அகற்றி துன்புறுத்தும் உறுப்பு.(4)


வலமிருந்து இடம் :

5) வதக்க ஆரம்பித்து காலையில் பறவையை விரட்டினால் மீனைப் பிடிக்கலாம்.(2)
9) கரகத்தின் இடையில் சில சில சமயம் முடிந்தால் மறைக்கப்படும்.(5)
13) சாலையின் ஒரு ஓரத்தில் குரங்கு வந்தால் மணக்கும்.(4)
14) அங்குசமின் முனையில் அங்கதனின் இடையை சொருகினால் வெட்டிக் கூட்டம்.(4)
18) ஆட்டுத் தலைக்கு பதில் மீன் தலையை வைத்து வீணையை வாசி.(3)


கீழிருந்து மேல் :

7) கவலையின் காலை உடைத்து காதலின் தலையை வெட்டி உள்ளே நுழைத்தால் செய்தி தரும்.(4)
10) அவள் மருவி மனைவி என்பது தெய்வப்பிறவி.(5)
12) உட்காராததால் மலைமகள் கண்மண் தெரியாமல் நதியாக ஓடுகிறாள்.(5)
14) பதியின் சரி பாதி இவள்.(2)
15) மிச்சம் விழுந்ததை கழித்து எடுத்தால் அடிப்பான்.(2)


இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

51 comments:

Show/Hide Comments

Post a Comment