Thursday, September 16, 2004

பழமொழி விளக்கம

1. "திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்தார்" என்பது பழமொழி. இதன் உண்மை பொருள் "திருநீறிட்டு யார் கெட்டார் ; இடாது யார் வாழ்ந்தார்" என்பதாகும்.
-வாரியார்.

2. "குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்" என்பது பழமொழி.ஆனால் இது உண்மையிலேயே இது "குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படணும்" என்பதே சரியானது. அதாவது, தன்னை குட்டுகிறவன் தன் சக்திக்கு நிகராக மோதுகிற தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே பழமொழியின் அர்த்தம்.
-குன்றக்குடி அடிகளார்.

3. "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே பழமொழி.ஆனால் உண்மையிலே இது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள்.இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது.

No comments:

Post a Comment