Wednesday, September 22, 2004

அது என்ன 14 ஆண்டுகள்?

14 ஆண்டுகள் ராமன் வனவாசம் செய்ய வேண்டும் என்று கைகேயி வரம் கேட்டாள்.அது என்ன 14 ஆண்டுகள் கணக்கு? முன் காலத்தில் ஆண்களுக்கு 16 வயதிலும் பெண்களுக்கு 12 வயதிலும் திருமணம் செய்வர்.இவர்களின் சராசரி வயது பதினாலு.அந்த பதினான்கு ஆண்டுக்குள் ஒரு புதிய தலைமுறை தோன்றி, புதிய சகாப்தமே மலர்ந்து விடும்.

தன் மகன் பரதன் மூலம் ஒரு புதிய தலைமுறை உருவாகி, ராமன் வனவாசம் முடிந்து வரும்போது, நிலைமையே அயோத்தியில் தலைகீழாக வேண்டும் என்பதற்காகத்தான் 14 ஆண்டுகள் ராமனை காட்டுக்கு அனுப்புகிறாள் கைகேயி. இது ஒரு பழைய கல்கியில் படித்த துணுக்கு(அதனாலே கம்பராமாயண ஆளுங்க என்கூட சண்டைக்கு வராதீங்க.)

No comments:

Post a Comment