ஓடும் ரயிலில் ஒருவன் கொலை செய்யப்பட்டு விட்டான்(இது செயப்பாட்டு வினைதானே?!?!). சிஐடி யோசி கொலை நடந்த பொழுது அந்தப் பெட்டியில் பயணம் செய்தவர்களை விசாரித்தார். ஒவ்வொருவரும் பின் வருமாறு வாக்குமூலமளித்தனர்.
மஞ்சள் சட்டை போட்டவர்(பேன்ட் வேற கலர்!), "நான் நிரபராதி. சிகப்பு சேலையணிந்த பெண்தான், கொலையுண்டவனோடு கடைசியாக பேசிக் கொண்டிருந்தாள்."
சிகப்பு சேலையணிந்த பெண்(ரோசாப்பூ ரவிக்கைகாரி), "நான் நிரபராதி. நான் கொலை செய்யப்பட்டவனோடு பேசவே இல்லை."
வழுக்கைத் தலை ஆசாமி(அர்விந்த்சாமி இல்லை! ஆசாமி), "நான் நிரபராதி. குதிரை வால் கொண்டை போட்ட பெண்தான் கொலை செய்தாள்."
குதிரை வால் கொண்டைக்காரி(அண்டங்காக்கா கொண்டை அப்போ ஃபேஷனில்லை!), "நான் நிரபராதி. இரண்டு ஆண்களில் யாரோ ஒருவர்தான் கொலை செய்தது."
இந்த முரண்பாடான வாக்குமூலங்களால் முதலில் குழம்பிப் போன சிஐடி யோசி, பின்னர், இவர்கள் கூறியவற்றில் சரியாக நான்கு வாக்கியங்கள் உண்மையென்றும், மீதி நான்கு வாக்கியங்கள் பொய் என்றும் கண்டுபிடித்தார்(அது எப்டின்னெல்லாம் கேனத்தனமா கேக்கக் கூடாது!).
இப்பொழுது நீங்கள் கண்டுபிடியுங்கள், இந்த நான்குபேரில் யார் கொலையாளி?
Saturday, April 28, 2007
புலன் விசாரணை
Posted by யோசிப்பவர் at 4:22 AM 3 comments
Thursday, April 26, 2007
வறுமை
உணரவில்லை என் வறுமையை நான் !
வீட்டு சாப்பாட்டின் தரம் குறைந்த போதும் சரி
பண்டிகை அன்று கூட புத்தாடை அணிய முடியாத போதும் சரி
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்ற முடியாத போதும் சரி
உணரவில்லை என் வறுமையை நான் !!
ஆனால் பெண்ணே,
உந்தன் ஒற்றை முகச்சுளிப்பில் -
என் நிலை அனைத்தையும் உணர்ந்தேன்
உறங்கிக்கொண்டிருந்த நான் உயிர்த்தெழுந்தேன்
இப்போது வெற்றிப் படிகளில் நான்
உன்னால் தான் பெண்ணே, ஆனால் உனக்காக அல்ல
வீட்டு சாப்பாட்டின் தரம் குறைந்த போதும் சரி
பண்டிகை அன்று கூட புத்தாடை அணிய முடியாத போதும் சரி
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்ற முடியாத போதும் சரி
உணரவில்லை என் வறுமையை நான் !!
ஆனால் பெண்ணே,
உந்தன் ஒற்றை முகச்சுளிப்பில் -
என் நிலை அனைத்தையும் உணர்ந்தேன்
உறங்கிக்கொண்டிருந்த நான் உயிர்த்தெழுந்தேன்
இப்போது வெற்றிப் படிகளில் நான்
உன்னால் தான் பெண்ணே, ஆனால் உனக்காக அல்ல
- விஜயவேல்
Posted by யோசிப்பவர் at 9:46 PM 7 comments
Labels: கவிதை மாதிரி?, மொத்தம்
Subscribe to:
Posts (Atom)