Thursday, December 11, 2008

குறுக்கெழுத்துப் புதிர் போT - 2

போன தடவை குறுக்கெழுத்துப் புதிர் போட்டதோட நிறுத்திக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனால் போன மாதத் தென்றலில் வாஞ்சிநாதன், நம்ம குறுக்கெழுத்தப் பத்தி ஒரு வரி சொல்லி, லிங்க் வேற குடுத்துட்டார். சரி, நம்மளை ஒருத்தர் இம்புட்டு தூரம் நம்புறாரேன்னு நினைச்சப்ப நெஞ்சம் கனத்தது; கண்கள் பனித்தது; உள்ளம் பூத்தது....!!! அதனால மறுபடி கஷ்டப்பட்டு கு.எ.புதிர் தயார் செய்து விட்டேன்.(ராஜினாமா வாபஸ்!)

இந்த தடவை நம்ம கொத்ஸ், கொஞ்சம் சீக்கிரமாவே அவரோட புதிரை போட்டுட்டார். அதனால் நாமும் இப்ப அதையே பண்ணினால் மக்களுக்கு வெறுத்துப் போயிடும்னு தோனுது. இருந்தாலும் உருவாக்கின புதிரை உடனே போடலைன்னா மண்டை வெடிச்சுடும்னு எங்க குருநாதர் சாபம் ஒன்னு இருக்கு. அதனால இன்றைக்கே போட்டுவிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். மக்களே, பொருத்தருள்க. இந்த குறுக்கெழுத்தைப் போட்டருள்க.

போன தடவை மாதிரியே மதிப்பெண் பக்கமும் உண்டு. உங்கள் மதிப்பெண்களை விடை சொன்ன அரை மணி நேரத்திற்குள்(அதாவது நான் உங்கள் விடையை பார்த்த பின் அரை மணி நேரத்திற்குள்;-)) இந்தப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இனியும் ரொம்ப அறுக்காமல், கு.எ.ஐ பார்க்கலாம்

125
3
4678
9
13
1410
11
151612


இடமிருந்து வலம் :-

1) கத்திக் குத்தை உற்றுப் பார்த்தால் நாக்கு குழறும் (3).
4) நினைவை அழித்து வீரத்தின் இறுதியில் பார்த்தால் அதுவே கிடைக்கும் (3).
6) எலும்புச் சாம்பலை அள்ளி ஓரத்தின் ஓரத்தை நறுக்கி கூர்மையான அயுதம் செய் (5).
10) திராவிடர் முன்னேற்றக் கழகம் திரும்பிய ஊர் (3).
14) பெண் குழந்தை (5).



மேலிருந்து கீழ் :-

1) திருட்டு முழி புத்திரி செல்வம் தேடித் தருவாள் (5).
2) குடுமிக்கு முடிவெட்டிப் பொட்டு வைத்து இன்பத்தில் முடிந்தால் வீடு வந்து சேரும் (5).
5) பிரயாணத்தின் நடுவே காணாமல் போய்விட்டால் கிலி பிடிக்கும் (3).
6) குசினிக்கு அடுத்த பாதியில் நீக்கு (5).
8) வைரத்தின் முனை மழுங்கினால் திருப்பிச் சுடலாம் (2).
9) பொட்டிழந்த கையைத் திருப்பி புகைப் பிடித்தால் ரத்தினம் கிடைக்கும் (5).
13) எனது பூஜ்யம் மிகுந்த கணிதத்தின் அடிப்படை (2).
14) எருமைத் தலையில் ஒரு உண்மை சேர்த்தால் உயர்வு (3).


வலமிருந்து இடம் :-

3) இடைஞ்சல் செய்ய உயிர்மாறிய தலையில் தொடு (2).
5) ஒட்டுவதைத் தேய்த்து இலையை வெட்டி வியாதி வந்தால் தேகம் மெலியும் (3,2).
9) அசுரத்தச்சன் ஈறு கெட்டு தலையில்லாமல் அருகில் வந்தால் நினைவிழக்க நேரிடும் (5).
11) தருதலை ஒரு மரமண்டை தெரியுமா? (2).
12) ஓசை கொஞ்சம் குறைந்தால் கௌரவக் கணக்கு இறுதியுமாகுமே (3).
16) முன்னோர் பொருளுடன் உரியது. இப்பொழுது பெண்களுக்கும் உண்டு. (5).


கீழிருந்து மேல் :-

7) சுழியில்லா நெருப்பு வலையில் சிறு துளி சுரக்கும் (3).
12) தெருக்கள் கூடுமிடத்தில் வீரன் வந்தால் தலை தப்பாதாயினும் ஒளி கிடைக்கும் (5).
15) யானையின் கை உடைந்தால் பறந்து விடும் (3).



பின் குறிப்பு :-

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை
இங்கே படிக்கலாம்.

41 comments:

Show/Hide Comments

Post a Comment