Thursday, September 18, 2008

உண்மையைத் தேடி

இன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு யோசிங்கவில் கேட்ட "ஒரே ஒரு ஊர்ல" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.

உங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அந்த இருவரில் யாராவது ஒருவரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்கள். அதன் மூலம் யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்று கண்டு பிடிக்க வேண்டும். அப்படியானால் உங்களது கேள்வி என்னவாக இருக்கும்? (ஒரு கேள்விதான் அலவ்டு!!)

வெண்பூ சுட்டிக் காட்டியதால் புதிரில் சின்னத்(?!) திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா?! தாங்கலைப்பா!)


தொடர்பில்லாத குறிப்பு : இந்தப் புதிர் கொஞ்சம் எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள், பயங்கர கஷ்டமான புதிரை படிக்க விரும்புகிறீர்களா? இங்கே செல்லவும். அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென்பதால், நான் முயற்சி செய்யவில்லை(எஸ்கேப்பு)!

13 comments:

Show/Hide Comments

Post a Comment