Wednesday, October 27, 2004

ஒரே ஒரு ஊர்ல

ஒரே ஒரு அறிவாளி இருந்தானாம்(உம்). அவன் பெரிய அறிவாளின்னு ராஜா வரைக்கும் தெரிஞ்சு போச்சாம்(உம்). உடனே ராஜா 'என்னை விட பெரிய அறிவாளியா? அதையும் பாத்துடலாம்' னு நினைச்சி, அந்த அறிவாளியை கைது பண்ணிட்டான்(உம்). அவனை அடைச்சு வச்ச சிறைக்கு ரெண்டு வாசல். ஒவ்வொரு வாசலிலேயும் ஒரு காவலாளி(உம் போட்டுகிட்டு இருக்கீங்களா?).

ராஜா அந்த அறிவாளியைப் பார்த்து, "இந்த ரெண்டு காவலாளிங்கள்ள ஒருத்தன் எப்பவும் பொய்தான் பேசுவான். இன்னொருத்தன் எப்பவும் உண்மைதான் பேசுவான். ஆனா யார் உண்மை பேசுவா; யார் பொய் பேசுவான்னு உங்கிட்ட சொல்ல மாட்டேன். இந்த ரெண்டு வாசல்ல, ஒரு வாசல் வழியா போனா நீ தப்பிச்சுரலாம். இன்னொரு வாசல் வழியா போனா பாதாளச் சிறைல மாட்டிப்பே. எந்த வாசல் எங்கே போகும்னும் சொல்ல மாட்டேன். நீ இந்த ரெண்டு பேர்ல ஒரே ஒருத்தன்ட, ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்கலாம். அத வச்சுக்கிட்டு உன்னால முடிஞ்சா இங்கேருந்து தப்பிச்சுப்போ. இல்லேன்னா பாதாளச்சிறைல மாட்டிக்கிட்டு சாகு"ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

அந்த அறிவாளியும் ஒரே ஒரு காவலாளிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு, அவன் சொன்ன பதில வச்சி சரியான வாசலைக் கண்டுபிடிச்சு தப்பிச்சுட்டான்.

ஆமா அவன் அப்பிடி என்ன கேள்விய கேட்டிருப்பான்? கேள்வி என்னன்னு யோசிச்சு, அதை Post Cardஇல் எழுதி, http:\\www.yosinga.blogspot.com அப்படிங்கர முகவரிக்கு அனுப்பினீங்கன்னா, எனக்கு வந்து சேராது. அதனால ஒழுங்கா commentலயே உங்களோட பதிலை, ஸாரி, கேள்வியைக் கேட்டுருங்க.

No comments:

Post a Comment