Friday, October 22, 2004

கவித! கவித!!

கவிதைப் புத்தகம் வெளியிடுவது என்பது, மிக உயரமான மலை உச்சியில் நின்று கொண்டு, ஒரு ரோஜா இதழைக் கீழே போட்டுவிட்டு, அதற்கு எதிரொலி கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு நிற்பது போல.

- டான் மார்க்கிஸ்.

கவிதை ஒன்றை வலைத் துணுக்கில் வெளியிடுவது என்பது, மிக உயரமான மலை உச்சியில் நின்று கொண்டு, ஒரு சிலந்தி வலையின் இழையைக் கீழே போட்டுவிட்டு, அதற்கு எதிரொலி கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு நிற்பது போல.

- யோசிப்பவர்.

ஒன்னுமில்லே! சும்மா நாமும் பொன்மொழி(?!?!) சொன்னா என்னன்னு தோனிச்சு; அதான். சரி இப்ப கவிதை.

எந்த....

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்.
எந்த ராமச்சந்திரன்
என்று நான்
கேட்கவுமில்லை, அவர்
சொல்லவுமில்லை

- நகுலன்(கோட் ஸ்டாண்ட் கவிதைகள்)

2 comments:

Show/Hide Comments

Post a Comment