Friday, December 23, 2011

கலைமொழி - 4

கலைமொழிப் புதிரால் ஈர்க்கப்பட்ட திரு.ராமசாமி, வெறும் ”நெடுக்காக” என்ற பதம் சரியாகப் புரியவில்லை என்று, இந்த விளையாட்டை ஆடுவது பற்றி ஒரு விளக்கமும் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது விளக்கம் கீழே...

இது மாயக்கட்டமுமில்லை, மந்திரமும் இல்லை. சாதாரண அறிவு விளையாட்டுதான். கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!!


இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும்.


எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


மிகவும் எளிதான ஆட்டம். ஆனால் சுவாரஸ்யமான ஆட்டம். ஆடித்தான் பாருங்களேன்!
கலைமொழி 3க்கான விடை :- ஜீனோ தாவி நின்று கொண்டு பதினைந்து செகண்டுக்கு ஒரு முறை வாலாட்டி அவ்வப்போது வவ் வவ் என்று குரைத்தது 

சென்ற முறை சுஜாதா என்பதே ஒரு க்ளூவாகிப் போனது. இனிமேல் நம் மக்களுக்கு க்ளூ எதுவும் தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது நாவல்களில் வந்ததோ, பிரபல எழுத்தாளர்கள் யாரும் எழுதியதோ கிடையாது. கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கலைமொழி 3க்கு விடையளித்தவர்கள் :- பூங்கோதை, கலை, ஹரிஹரன், ஹேமா, முத்து, பத்மா, அனிதா, அருந்ததி, ராமசாமி, ஹரி, மாதவ். அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!!!

எச்சரிக்கை : இன்னும் சில மணி நேரங்களில் கணிதக் குறுக்கெழுத்தை எதிர்பாருங்கள்!!

13 comments:

Madhav said...

OK. kandippa kulichirunenunga!!

யோசிப்பவர் said...

மாதவ்,

கலக்கிட்டீங்க. இவ்வளவு விரைவா நா எதிர்பார்க்கலை.

பிகு 1:- எதுக்கும் முழுமையான விடையையும் ஒரு முறை சொல்லிவிடுங்களேன்.:))

பிகு 2: அப்புறம் மறக்காம “அதை” செஞ்சிடுங்க!!;))

ஜி. கே. சங்கர், பெங்களூர் said...

எல்லோரும் உன்னிடமிருந்து விலகிப் போனால் யாருமே உன்னருகில் வருவதில்லையானால் நீ தனிமையாக்கப் பட்டதாக உணர்வாயானால் அதற்காக வருத்தப்படாமல் ஒன்று புரிந்து கொள். அப்பொழுது நீ கண்டிப்பாக குளித்தாக வேண்டும்

யோசிப்பவர் said...

ஜி.கே.சங்கர்,

சரியான விடை!!

கலந்து கொண்டதற்கு நன்றி!

ஹேமா said...

எல்லோரும் உன்னிடமிருந்து விலகிப் போனால், யாருமே உன்னருகில் வருவதில்லையானால், நீ தனிமையாக்கப்பட்டதாக உணர்வாயானால், அதற்காக வருத்தப்படாமல் ஒன்று புரிந்து கொள்! அப்பொழுது நீ கண்டிப்பாக குளித்தாக வேண்டும்.

padhma ani arun said...

ellorum unnidamirunthu vilakipponaal yaarumae unnarukil varuvathillaiyaanaal nee thanimai aakapattathaaga unarvaayaanaal atharkaaga varutha padaamal ondru purinthu kol .appoluthu nee kandippaaga kulithaaga vendum....

yappa type adikrathukulla paathi maranthu poiduthu!kandupidichathu naanu.climax mattum arun.

Anthony said...

பரவாயில்லை, இந்த முறை கொஞ்சம் கடினம் தான். 6-7 வரிகள் நன்றாகவே உள்ளன.

யோசிப்பவர் said...

ஹேமா சரியான விடை!!!

யோசிப்பவர் said...

பத்மா,அனி,அருண்

மூவருக்கும் வாழ்த்துக்கள்!! சரியான விடைதான்.

யோசிப்பவர் said...

ஆமாம் மனு,

வரிகள் கூடக் கூட கடினமாகிறது!! ஆனாலும் வழக்கமா முடிக்கிற ஆளுங்க முடிச்சுட்டாங்க. முழுதாகப் போட்டு முடிக்க கொஞ்சம் அதிக நேரமாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஹரி said...

"எல்லாரும் உன்னிடமிருந்து விலகிப் போனால், யாருமே உன்னருகில் வருவதில்லையானால், நீ தனிமையாக்கப்பட்டதாக உணர்வாயானால், அதற்காக வருத்தப்படாமல் ஒன்று புரிந்து கொள். அப்பொழுது நீ கண்டிப்பாக குளித்தாக வேண்டும்."

யோசிப்பவர் said...

ஹரி,

சரியான விடை! வொய் ஸோ லேட்டு?;)

கோகுல் said...

இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_24.html