Saturday, October 24, 2009

குறுக்கெழுத்துப் போT - 5

Hello everybody,
இந்த மாத குறுக்கெழுத்து புதிரை தீபாவளி ரிலீஸாக வெளியிட நினைத்தேன். ஆனால், அதிகப்படியாக வந்திருந்த ஸ்வீட், காரத்தால் (பூங்கோதை, பார்த்தசாரதி, இலவச கொத்தனார்) ஒரு வார தாமதம் ஏற்பட்டுவிட்டது. Just ஒரு வாரம் தான்! பொங்கல் ரிலீஸ் என்று ஆகவில்லையே!

வெல், அடுத்தடுத்து குறுக்கெழுத்து solve பண்ணி fed up ஆகியிருப்பீர்களோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வால் இம்முறை புதிரை சற்று எளிதாகவே அமைத்துள்ளேன்.

இது போன்ற குறுக்கெழுத்து புதிரை அவிழ்ப்பதற்கு திரு. வாஞ்சி அவர்களின் எளிய அறிமுகம் இங்கே! வழக்கம் போல மதிப்பெண் பட்டியல் இங்கே.

இனி புதிருக்கான கட்டவலையும், குறிப்புகளும் . . . . . .

1
234
5






67
8







910

11



1213
14





15
16
1718







19


குறுக்காக :

2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்கள் புனைந்தார்? (6)
6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா? (5)
8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான். (4)
9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது. (4)
12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே. (4)
16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது. (4)
17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள். (5)
19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம். (6)

நெடுக்காக :

1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள். (4)
3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி. (3)
4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம். (6)
5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி. (4)
7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை. (3)
9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது. (2)
10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன். (6)
11) கோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும். (2)
13) பாபம் மாற்றிய புண்ணிய நதி. (3)
14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன். (4)
15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான். (4)
18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே. (3)

8 comments:

Show/Hide Comments

Post a Comment