Monday, August 27, 2007

எதிர்பாராத தூக்கு


ஒரு கொலை! கொடூரமான கொலை!! கொலை செய்தவனை பிடித்துக் கோர்ட்டில் நிறுத்தினார்கள்(நல்லவேளையாக அரசியல் குறுக்கீடுகள் எதுவுமில்லை!). விசாரணை செய்த நீதிபதி, கொலையாளிக்கு மரண தண்டனை விதித்தார்(மனிதநேய ஆர்வலர்கள் யாரும் போராடவில்லை). கொலை நடந்த கொடூரமான முறையை கவனத்தில் கொண்ட நீதிபதி, மரணதண்டனை விதித்தோடு திருப்தியடையவில்லை. உளவியல் ரீதியாகவும் அவனை துன்புறுத்த எண்ணினார். அதனால் அடுத்த வாரத்தில், அவன் எதிர்பாராத ஒரு நாளில், அவனை தூக்கிலிடவேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இதனால் தினமும், 'இன்று நம்மை தூக்கில் போட்டு விடுவார்களோ என்று ஒவ்வொரு நாளும் அவன் பயந்தே சாவான்' என்று எண்ணினார். ஆனால் இந்த தீர்ப்பை கேட்டதும் கொலையாளி மிகவும் மகிழ்ந்தான். அடுத்தவாரத்தில் ஒரு நாளில், நீதிபதி தீர்ப்பளித்தபடி, அவனை தூக்கிலிட்டார்கள்.

இப்ப கேள்வி(கள்) என்னன்னா(எத்தனை "ன"?!), தீர்ப்பு சொன்னதும் கொலையாளி ஏன் சந்தோஷப்பட்டான்? அவனை வாரத்தின் எந்த நாளில் தூக்கிலிட்டார்கள்?

19 comments:

Show/Hide Comments

Post a Comment