Saturday, August 04, 2007

பதிவர் பட்டறை - முக்கிய அறிவிப்பு

பதிவர் பட்டறை நாளை "சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகத்தில் (Marina Campus)" நடைபெற இருப்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த மெரினா கேம்பஸ் எங்கே இருக்கிறது? வாலஜா ரோட்டிலிலிருக்கும் சென்னை பல்கலை வளாகத்துக்கு சென்று யாரும் ஏமாற வேண்டாம்(என்னை மாதிரி!!). இந்த மெரினா கேம்பஸ் கடற்கரை சாலையிலேயே, பிரசிடன்ஸி கல்லூரி வளாகத்துக்கு அடுத்ததாக இருக்கிறது. அதனால் நாளை யாரும் வாலஜா சாலைக்கு சென்று ஏமாறாமல், க்டற்கரை சாலையில் இருக்கும் மெரினா கேம்பஸுக்கு வரவும்.

வலைப்பதிவர்கள் நலன் கருதி இத்தகவலை வெளியிடுபவர் யோசிப்பவர்(அப்பாடா! பட்டறை பற்றி நானும் ஒரு பதிவு போட்டுட்டேன்!)

3 comments:

Show/Hide Comments

Post a Comment