Thursday, January 27, 2005

ஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .

நானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய (வலைப்பதிவு)செய்திகள் எதையும் படிக்காமல் இதை எழுதிக்(தட்டி) கொண்டிருக்கிறேன்.

முதலில் கணித வித்தை.

உங்கள் நண்பர் அல்லது நண்பியை பல இலக்க எண் ஒன்றை எழுதி கொள்ள சொல்லுங்கள். எழுதிவிட்டார்களா? இப்பொழுது அதில் இருக்கும் ஒவ்வொரு தனி இலக்கங்களையும் கூட்ட சொல்லுங்கள்(சரியா வரலை!!). அதாவது இப்ப 9573 என்று எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை இப்படிக் கூட்ட வேண்டும் (9+5+7+3). இப்பொழுது அப்படி கூட்டி வந்த விடையை முதலில் எழுதிய பல இலக்க எண்ணிலிருந்து கழிக்க சொல்லுங்கள்(9573-24). கழித்து விட்டார்களா? மிதி வந்த விடையிலிருந்து ஏதாவது ஒரு எண்ணை அடித்து விட சொல்லுங்கள்(9549 -> 9_49). அடித்து விட்டார்களா? மீதி இருக்கும் இலக்கங்களை சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் கூறும் எண்களிலிருந்து அவர்கள் அடித்த எண் எது என்று நீங்கள் சொல்லி அவர்களை அச்சர்யப்படுத்துங்கள். எப்படி அவர்கள் அடித்த எண்ணை சொல்வது?

ரொம்ப சுலபம். அவர்கள் கூறும் எண்களை கூட்டுங்கள்(9+4+9=22). அதை ஒன்பதால்(9) வகுங்கள்(22/9). மீதி 4 வரும். இந்த மீதியுடன் எதைக் கூட்டினால் 9 வரும் என்று பாருங்கள்(4+5=9). அப்படியானால் 5 தான் அவர்கள் அடித்த எண். நீங்கள் மனக்கணக்கில் புலியாயிருந்தால் நேரடியாகவே கூட்டுத்தொகையுடன் எதை கூட்டினால் 9தின் வகுபடு எண்('Multiples' என்பதன் தமிழ் வார்த்தை சரியா?) வரும் என்றும் கண்க்கிட்டுக் கொள்லலாம்.

இருங்க! இருங்க!! இன்னும் கேள்வியே கேட்கலியே!!!

இப்போ கேள்வி

இந்த வித்தை எப்படி வேலை செய்கிறது. அதாவது விளக்கமாக கேட்டால் அந்த கடைசி விடை ஏன் எப்பொழுதும் 9தால் வகுபடக் கூடிய எண்ணாகவே இருக்கிறது? இதுதான் கேள்வி.

இந்தக் கேள்விக்கு விளக்கமான பதில் தருபவர்களுக்கு 'கணித மாமேதை' என்ற விருதை நாம் கொடுத்தாலும் யாரும் மதிக்கப் போவதில்லை என்பதால், அவர்கள் பெயர் மட்டும் நமது Comment பகுதியில் அவர்களது Commentக்கு கீழேயே பொறிக்கப்படும்(நிரந்தரமாக) என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

13 comments:

Show/Hide Comments

Post a Comment