Wednesday, November 05, 2008

ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி

முன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல!!!!!!!!!

ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற விலையில் விற்கிறார். அழகிரி தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 3 கிலோ என்ற விலையில் விற்கிறார்.

ஒரு நாள் இருவரிடமும் தலா 60 கிலோ அரிசி இருக்கிறது. ஆனால் அன்றைக்கு ஸ்டாலினால் வியாபாரத்துக்கு போக முடியவில்லை. அதனால், தன்னிடமுள்ளதை அழகிரியிடம் ஒப்படைத்து, அதையும் தனக்காக சந்தையில் விற்று வரும்படி கூறுகிறார்.

ஸ்டாலின் விற்கும் விலை அழகிரிக்குத் தெரியுமாதலால், ஸ்டாலினுக்கு 30 ரூபாயை கொடுத்துவிட்டு அரிசியை வாங்கிக் கொள்கிறார். சந்தையில் விற்கும்பொழுது அழகிரி வழக்கம் போல விற்காமல், இரு அரிசிகளையும் கலந்து, இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ அரிசி வீதம் விற்றுத் தீர்த்தார். கணக்குப் பார்த்தார்.

ஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.
தனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.

ஆனால் அவர் கையில் 48 ரூபாய்தான் இருந்தது. இரண்டு ரூபாயை எங்கே, எப்படி கோட்டை விட்டார் அழகிரி?

பின்குறிப்பு : இது ஒரு அக்மார்க் புதிர் கணக்கு. நீங்கள் நுண்ணரசியலையெல்லாம் தேடினால், நான் பொறுப்பல்ல!!!

49 comments:

Show/Hide Comments

Post a Comment