Thursday, December 28, 2006

அறுவை புதிர்

ரயில் புதிர் கேட்டு கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகப் போகிறது. அதனால் அடுத்ததும் கொஞ்சம் கஷ்டமான புதிர்தான்.

அது ஒரு குக்கிராமம். அங்கே ஒரு சின்ன(ரொம்ப சின்னது!) மருத்துவமனை. ஆனா அங்கே இருந்த டாக்டர் ஒரு சர்ஜன். ஒரு வாரத்துக்கு ஒரு முறை பக்கத்து ஊரிலிருந்து, மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார். இதனால் மருத்துவமனையில் அடிக்கடி பற்றாக்குறை ஏற்படுவதுண்டு.

ஒரு வெள்ளிகிழமை, நம்ம சர்ஜனுக்கு சோதனையாக, கிராமத்தில் ஒரு பெரிய விபத்து நடந்தது. ஒரு வேனும் காரும் மிக பயங்கரமாக மோதியதில், கார் டிரைவர், ஓனர், வேன் டிரைவர் மூவருக்கும் சரியான அடி. மூவரையும் நமது சின்ன மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அவர்களை பரிசோதித்த நமது சர்ஜன் மூவருக்கும் அவசரமாக ஒரு சின்ன ஆப்பரேஷன் செய்தால்தான் பிழைப்பார்கள் என்று உணர்ந்தார். இப்பொழுது ஒரே ஒரு பிரச்சனைதான். அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் மொத்தம் இரண்டே இரண்டு ஜதை கையுறைகள்தான் இருப்பிலிருந்தன. இரண்டு ஜதை கையுறைகளை வைத்துக் கொண்டு எப்படி மூன்று பேருக்கு ஆப்பரேஷன் செய்வது? சிறிது நேரம் யோசித்த நமது சர்ஜன், ஒரு முடிவிற்கு வந்தவராக, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மூவருக்கும் வெற்றிகரமாக அறுவையை முடித்து, அவர்கள் உயிரை காப்பாற்றினார். இதில் முக்கியமான விஷயம் அவர் யாருக்கும் பாதுகாப்பற்ற முறையில் ஆப்பரேஷன் செய்யவில்லை. மூவருக்குமே பாதுகாப்பான முறையில்தான் ஆப்பரேஷன் செய்தார். அதே சமயம் தனக்கும் எந்த விதமான கிருமிகளின் பாதிப்பும் இல்லாதபடி பார்த்து கொண்டார். கையுறை இல்லாமலும் அவர் யாருக்கும் அறுவை செய்யவில்லை. அப்படியானால் இரண்டே இரண்டு ஜதை கையுறைகளை வைத்து கொண்டு எப்படி மூன்று பேருக்கு பாதுகாப்பான முறையில் அறுவை செய்தார்?

கொஞ்சம் விளக்குங்கள்!!!

11 comments:

Show/Hide Comments

Post a Comment