Thursday, July 27, 2006

கொள்ளை

சதீஷ், ராஜேஷ், கலை, சுரேஷ், மணி ஐவரும் கடற் கொள்ளையர்கள். ஒரு முறை கொள்ளையில் ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தன. அதை ஐவரும் பங்கு போட்டுக் கொள்வதென தீர்மானித்து, பங்கு போடும் பொறுப்பை மணியிடம் முதலில் ஒப்படைத்தனர். பங்கு போடுபவன் சொல்லும் பங்கு ஒப்பந்தம் ஒப்புக்கொள்ள படாவிட்டால், மீதியுள்ளவர்கள் சேர்ந்து பங்கு போட்டவனை கொன்று விடுவார்கள். பெரும்பான்மையானவர்கள் ஆதரித்தால் மட்டுமே ஒப்பந்தம் ஒப்புகொள்ளப்படும். முக்கியமான விஷயங்கள் சில - ஐவருமே அறிவாளிகள், ரத்தம் பார்க்க தயங்காதவர்கள்(ஒரே சீவுதான்), பேராசைக்காரர்கள். இப்படியிருக்கையில் மணி எப்படி 1000 பொற்காசுகளை பங்கிட்டிருப்பான்?

20 comments:

Show/Hide Comments

Post a Comment