Friday, August 27, 2004

மூன்று புதிர்கள்

திரு. துரைசிங்கம் எனக்கு மூன்று புதிர்கள் அனுப்பியுள்ளார்.

1. கண்ணனுடைய அப்பாவுக்கு ஐந்து குழந்தைகள். ஆணழகன், ஈரழகன், ஊரழகன், ஏழழகன். ஐந்தாவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் ?

ஓரழனா.. ஐயோ.. கேள்வியை வாசியுங்கள்.
கண்ணன் தான் மற்றவர்.

2. ஓட்டப் பந்தயத்தில் கடைசியாகச் செல்பவரை நீங்கள் முந்தினால், எத்தனையாவதாக ஓடுவீர்கள் ?

கடைசியாக ஓடுபவரை எப்படி முந்துவது. நீங்கள் கடைசி என்றால், உங்களை முந்தினாலும் நீங்கள் கடைசி தானே !
3. வேகமாகக் கூட்டுங்கள் பார்க்கலாம் : 1000, 40, 1000, 30, 1000, 20, 1000, 10. விடையென்ன ?
.
.
.
.
.
(5000 என்றால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். விடை 4100)

No comments:

Post a Comment