Tuesday, April 10, 2012

கலைமொழி - 17


SPOILER : இந்த முறை தமிங்கில வார்த்தைகளும் இருக்கின்றன.

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் கட்டத்தில் ஓர் எழுத்து வார்த்தை, அடுத்த மூன்று கட்டங்களுக்குள் ஒரு மூன்றெழுத்து வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.




எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.






சென்ற முறை பல ஒற்றுப் பிழைகள் நிகழ்ந்து விட்டன. அவற்றை சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கும், அவற்றையும் பொறுத்துக் கொண்டு விளையாடி விடைகள் அனுப்பிய நண்பர்களுக்கும் நன்றி!!

சென்ற கலைமொழிக்கான விடை(ஒற்றுப் பிழைகளுடன்) : அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார் அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே 


விடை கூறியவர்கள் : தமிழ் பிரியன், முத்து, நாகராஜன், கலை, ஹரி, மாதவ், மனு, அரசு, பூங்கோதை.

25 comments:

Show/Hide Comments

Post a Comment