Thursday, March 15, 2012

சொல் கலை - 3

சென்ற சொல்கலைக்கும் நல்ல வரவேற்பு. நன்றி!!!:)

இந்த முறை சொல் கலைப் புதிரை 10அம்மா அமைத்துக் கொடுத்திருக்கிறார். புதிர் கொஞ்சம் கடினமாகியிருக்கிறது. ஆனாலும் நீங்கள் இதை சுலபமாக ஊதித் தள்ளி விடுவீர்கள் என நம்புகிறேன். இந்த முறை இறுதி விடையில் மொத்தம் 20 எழுத்துக்கள்.

அனைத்து விடைகளுமே completed பட்டனைத் தட்டியதும், பெட்டியில் தெரிவது போல் மாற்றியாயிற்று. அதனால் பெட்டியில் உள்ளதை copy செய்து commentல் paste செய்வது மட்டுமே உங்கள் வேலை.

புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :- முதலில் இருக்கும் ஒன்பது வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 20 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “பட்டினத்தார் இறுதியில் கொண்டு போக முடியாதது” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


பட்டினத்தார் இறுதியில் கொண்டு போக முடியாதது

மன்னிக்கவும் நண்பர்களே,

bloggerஇல் அகலம் போதாமையால், இறுதி விடைக்கான கட்டங்களில் 16 மட்டுமே பார்வைக்கு கிடைத்தது. நான் முதலில் கவனிக்கவில்லை. அதனால் இப்பொழுது இறுதி விடைக்கான கட்டங்கள் இரண்டு வரிகளாகத் தெரியும்படி மாற்றிவிட்டேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய மீனாட்சி, தமிழ் பிரியன் ஆகியோருக்கு நன்றி!!


சென்ற சொல் கலைக்கான விடை :- 

1) கல்லுளிமங்கன் 
2) வெளிவாசல்
3) அவசியம்
4) சலசலப்பு
5) இளமையில்
6) மாமணியே
7) தேய்மானம்

வாய்மையே சில சமயம் வெல்லும்.(சுஜாதாவின் நாவல்)

விடை கூறியவர்கள் :- மாதவ், சுரேஷ், பூங்கோதை, மனு, தமிழ் பிரியன், அரசு, 10அம்மா, முத்து, ராசுக்குட்டி, முகிலன், சாந்தி, மீனாட்சி, பார்த்தசாரதி, ராஜேஷ் கார்கா, வீ.ஆர்.பாலகிருஷ்ணன்.

31 comments:

Show/Hide Comments

Post a Comment