Monday, June 29, 2009

குறுக்கெழுத்துப் போT - 3 - விடைகள்

இந்த முறைப் போTக்கு சுமாரான வரவேற்பே இருந்தது. நீண்ட இடைவெளி விட்டு விட்டதால் இருக்கலாம். இந்த முறை முதல் ஆளாக முடித்தது பெனாத்தலார். குறுக்காக 5க்கு குறிப்பு இல்லைங்கிறதையும் சுட்டிக் காட்டினார்(கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழித்து). அப்பொழுதுதான் கவனித்தேன் - குறுக்காக 5க்கு குறிப்பே எழுதவில்லை. அப்புறம் அவசர அவசரமாக யோசித்து குறிப்பை எழுதினேன்.

இந்த முறை பங்கெடுத்துக் கொண்டவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே கட்டங்களை முழுதும் முடித்திருந்தார்கள். எளிதாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இனி விடைகளைப் பார்க்கலாம்.

குறுக்காக :
2) ”ல”ட்டைப் பிட்டு + அ”த்தி”க் காம்பில் வைத்தால் = கரிக்கழிவு (3).
விடை : லத்தி.

3) ”சகித்துக் கொள்ள” = அ”ங்”கு இடையை -> நடுவில் தா(க்)கு (3).
விடை : தாங்கு

5) ”சமவெளி நாகரிகத்தின்” -> இறுதி உயிரைத் திரித்து = யோசி (3).
விடை : சிந்தி

7) ”படுதா”மரையில் மறைந்திருப்பது திரை (3).
விடை : படுதா

8) ”கூடம்” இடையில் + “வ”சிக்க ஆரம்பித்தால் = ஆறும் நாறும் (3).
விடை : கூவம்

10) ”வ(கை)”யின் கரத்தில் + மனைவி அமர்ந்தால் = சொகுசு (3).
விடை : வசதி

11) ”தடி” <- நடுவே -> க”ட்”டுப் போட்டால் = மறைக்கலாம் (3).
விடை : தட்டி

12) ”து”ணி வெட்டி + விஞ்ஞான ஜனாதிபதிக்கு -> முடி திருத்தினால் = எடை போடலாம் (3).
விடை : துலாம்.

13) கதராடையில் சரி பாதி கிழித்து + தமய”ந்தி”யின் காலில்லா அண்ணன் இறந்தால் = ஒளி வீசும் (3).
விடை : காந்தி.

15) வலியில் கத்தித் + துள்ளினால் = அக்கினிக்கு உணவு (3).
விடை : ஆகுதி.

16) அறு”வை” அறுத்து + “கை(கரம்)” காலை ஒட்டினால் = மின்னும் கரி (3).
விடை : வைரம்.

17) வள்ளலின் + கரங்களில் = திரும்பிய பெண்மணி (3).
விடை : காரிகை.

நெடுக்காக :

1) ”இவன்” இடையில் + ஆங்கிலத்தில் அதிர்ஷ்டம் தேய்ந்து வந்ததால் = இளையவன் ஆனான் (6).
விடை : இலக்குவன்.

3) ”தகர வரிசை” படிக்கிறாள் = வேலைக்காரி (2).
விடை : தாதி.

4) அங்”கும்” இறுதியாக + சு”ப்ப”ன் நடுவே நுழைந்து = பார்த்தால் சேரி (4).
விடை : குப்பம்.

5) “சித்தனை” அழைத்த + ”மகிழ்ச்சி”யில் ஆணையைத் தொலைத்தால் = தத்துவம் பிறக்கும் (6).
விடை : சித்தாந்தம்.

6) ”சிறையில் இருப்பவன்” திரும்பி வந்தால் = ஆச்சர்யமடை(2).
விடை : திகை

8) ”கூ”டல் தொடங்க + தலையற்று ச”திர்” ஆடும் + நேரம் = நடுங்கும் (6).
விடை : கூதிர்காலம்.

9) ”கொம்பில் ஏறும் செடியில்” + ”முந்தானை”யை படரவிட்டு + ”ஒரு ஸ்வரம்” இசைத்தால் = பழம் சாப்பிடலாம் (6).
விடை : கொடிமுந்திரி.

12) வணங்கி + கைநீட்டி = ஆசிர்வாதம் தரும் (4).
விடை : துதிக்கை.

14) கொ”சுவை”க் கொஞ்சம் நசுக்கினால் = ருசிக்கலாம் (2).
விடை : சுவை.

15) பசுவும் + காக்கையும் சேர்ந்திருந்தால் = பிரமாதம் (2).
விடை : ஆகா.

இப்படியாக, பங்கெடுத்துக் கொண்டவர்கள் அனைவரும், இறுதியில் புதிர் “ஆகா” என்றிருந்ததாக கூறியுள்ளனர்!!!;-)

2 comments:

Show/Hide Comments

Post a Comment