Tuesday, July 15, 2008

வட்டமேஜை கொள்ளையர்கள

ஒரு வட்ட மேஜையில் நான்கு பேர் அமர்ந்துள்ளனர். அதில் ஒருவன் திருடன், ஒருவன் தாதா, ஒருவன் கொலைகாரன், மற்றொருவன் கடத்தல்காரன். இவர்களில் இருவர் மட்டுமே உண்மையான குற்றவாளிகள். மீதி இருவர் அவர்களை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் வந்துள்ள சிஐடி ஆபீசர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு நால்வரும் யார் யார் என்பதையும் அவர்கள் எவ்வாறு அமர்ந்துள்ளனர் என்பதையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


1. காளியும் கமலும் குற்றவாளிகள்.

2. காளி தாதாவிற்கு எதிரில் அமர்ந்துள்ளான்.

3. சிஐடி வெங்கி திருடனுக்கு இடதுபக்கம் உள்ளார்.

4. சிஐடி மங்கி கொலைகாரனுக்கு எதிரில் இருக்கிறார்.

5. சிஐடி மங்கி திருடன் கிடையாது.

2 comments:

Show/Hide Comments

Post a Comment