Friday, October 27, 2006

ரயிலே ரயிலே...

கஷ்டமான கேள்வி கேட்டு நாளாச்சுன்னு நினைக்கிறேன். இது கொஞ்சம் கஷ்டம்தான்(எனக்குப்பா!! உங்களுக்கு எப்படின்னு நீங்கதான் சொல்லனும்).

என்னை மாதிரி ஒரு அழகான பையன், பேரு வேணா சூர்யான்னு வச்சுக்கலாம், ரயில் தண்டவாளம் ஓரமா சோகமா நடந்து போயிட்டிருக்கா(கே)ன். இன்னொரு இடத்துல ஜோதிகான்னு ஒரு அழகான பொண்ணு(நெஜமாவே ஜோதிகாதான்! மாதிரியெல்லாம் கிடையாது!!!) அதே மாதிரி சோகமா ரயில் தண்டவாளம் ஓரமா நடந்து போயிட்டிருக்கா. பேக்ரவுண்டுல "மின்னலேலே, நீ வந்த..." அப்படின்னு பாட்டு போடறோம். "டும்டும்டும்டும் டும்டும்டும்டும்" அப்படின்னு பீட் வரும்போது, ஒரு ரயில், அதாவது Trainனு ஆங்கிலத்துல சொல்வாங்க; அந்த ரயில், சூர்யாவ கிராஸ் பண்ணுது. "டும்டும்டும்டும் டும்டும்டும்டும்...", பத்தாவது செகண்ட், அந்த ரயிலோட கடைசி பெட்டி சூர்யாவ கிராஸ் பண்ணிச்சு. 'வால் கிளாக்'க காட்டறோம். மணி சரியா பத்து இருபது. "கண் விழித்து பார்த்த போது..." சரணம் முழுக்க ரெண்டு பேரும் நடந்து போயிட்டே இருக்காங்க. சரணம் முடிஞ்சதும் மறுபடியும் "டும்டும்டும்டும் டும்டும்டும்டும்...". மறுபடி 'வால் கிளாக்'க காட்டறோம்,சரியா பத்து நாற்பது. "டும்டும்டும்டும் டும்டும்டும்டும்...", அதே ரயில் ஜோதிகாவ கிராஸ் பண்ணுது. ஒன்பதாவது செகண்ட் முடியும் போது ரயிலோட கடைசி பெட்டி கிராஸ் பண்ணிருச்சு. "பால் மழைக்கு காத்திருக்கும் பூமியில்லையா..." சரணம் முழுக்க மறுபடியும் ரெண்டு பேரும் நடக்கறதை காட்டறோம். பாட்டு முடியும்போது ரெண்டு பேரும் மீட் பண்றாங்க. அதுக்கப்புறம்...(உங்கள் கற்பனைக்கு!!)

சரி! ஃபீல் பண்ணது போதும்!! இப்ப நம்ம கேள்விக்கு வாங்க.

பாட்டு முடியறதுக்கு முன்னாடி, அதாவது சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ரதற்கு முன்னாடி நாம 'வால் கிளாக்'க காட்டறோம்(காட்டறோம்!!!). அப்ப அதுல மணி என்ன?

3 comments:

Show/Hide Comments

Post a Comment