Wednesday, October 11, 2006

சொன்னா கேட்டியா?

ஐந்து காட்டுமிராண்டிகளுக்கு(நர மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ப்ரோக்ரமராக வேலை கிடைத்தது. முதல் நாள் அவர்களை வேலைக்கெடுத்த HR அவர்களிடம், "இங்க நீங்க நிறைய சம்பாதிக்கலாம். கம்பெனியிலேயே கான்டீன் இருக்கு. என்ன வேனா சாப்பிடலாம். ஆனா ஒன்னே ஒன்னு, மத்தவங்களுக்கு தொல்லை கொடுக்காம இருங்க!". காட்டுமிராண்டிகளும் ஒத்து கொண்டனர்.

ஒரு மாதம் கழித்து, HR அவர்களிடம் வந்தார், "நீங்க எல்லாருமே ரொம்ப கடுமையா வேலை பார்க்கறீங்க. கம்பெனிக்கு ரொம்ப திருப்தி. ஆமா, நம்ம ப்ரோக்ரமர்ஸ்ல ஒருத்தனை காணோமே. அவனை பத்தி உங்க யாருக்காவது ஏதாவது தெரியுமா?. காட்டுமிராண்டிகள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

HR போன பிறகு, காட்டுமிராண்டிகளின் தலைவன், "எந்த மடையன்டா அந்த ப்ரோக்ரமரை தின்னது?" கோபமாக கேட்டான்.

ஒரு காட்டுமிராண்டி தலையை குனிந்து கொண்டு கையை தூக்கினான். தலைவன் அவனை பார்த்து, "அறிவு கெட்டவனே! ஒரு மாசமா டீம் லீடர்ஸ், ப்ராஜக்ட் லீடர்ஸ், ப்ராஜக்ட் மேனேஜர்ஸ்னு சாப்பிட்டுகிட்டிருந்தோம். யாராவது கண்டுபிடிச்சாங்களா? இப்ப நீ ஒரு ப்ரோக்ரமரை சாப்பிட்டதும், உடனே கண்டுபிடிச்சுட்டாங்க பார்! இனியாவது 'வேலை செய்யறவங்களை' சாப்பிடாதே!"

3 comments:

Show/Hide Comments

Post a Comment