Saturday, April 01, 2006

இஷ்டத்துக்கு யோசிங்க - II

புதிர் போட்டு ரொம்ப நாளாச்சு!!! நம்ம வலைத் துணுக்கே அதுக்குத்தானே. அதனால இஷ்டத்துக்கு யோசிங்க இரண்டாவது பதிவு இது. இஷ்டத்துக்கு யோசிச்சு கீழேயுள்ள புதிர்களுக்கு பதில் சொல்லுங்க!!!

1) சரவணனும், அருணும் விவசாயிகள். இருவருடைய நிலங்களும் அடுத்தடுத்து இருந்தன. இருவருடைய நிலங்களின் நீள அகலங்களும் ஒரே அளவுதான். இருவரும் ஒரே பயிரைத்தான் எப்பொழுதும் பயிரிடுவார்கள். ஒரே மாதிரியான விவசாய முறைகளைதான் கையாள்வார்கள். ஆனாலும் எப்பொழுதும் சரவணன் அருணைவிட அதிக விளைச்சல் அறுவடை செய்கிறான். இது எப்படி?

2) ஒரு ஆணும் ஒரு பெண்ணும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து கொண்டனர். இருவருக்குமிடையில் மிகவும் அந்தரங்கமான உரையாடல் நடந்தது. ஆனாலும் ஒருவர் உருவத்தை பற்றி இன்னொருவர் தங்களது நண்பர்களிடம் விவரிக்க முடியவில்லை. ஏன்?


3) மத்திய சிறையில் மச்சாடோ தனது வக்கீலுடன் பேசிக்கொண்டிருந்தான். ஜட்ஜ் பெய்லை மறுத்துவிட்டதால் இருவரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். விவாதத்தின் முடிவில் மச்சாடோ கோபமாக சிறையிலிருந்து வெளியெறினான். இதை விளக்க முடியுமா?

4) பாண்டியராஜன் மூன்று முறை முயற்சி செய்த பிறகு கடைசியாக அந்த கொட்டகையின் கீற்றில் ஓட்டை போட்டு உள்ளே ஓடி கொண்டிருந்த படத்தை பார்க்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அங்கிருந்து போய்விட்டான். பிறகு அடுத்த நாள் அதே படத்தை டிக்கெட் வாங்கி போய் பார்த்தான். என்ன நடக்கிறது?

33 comments:

Show/Hide Comments

Post a Comment