Saturday, February 11, 2006

சரணமும் பல்லவியும் (பாலா மன்னிக்கவும்)

வழக்கமா பாலாதான் இந்த வேலையை செய்வார். நாமளும் அதே மாதிரி ஒரு தடவை செய்யனும்னு ரொம்ப நாளா ஆசை. இன்னைக்கு அந்த ஆசையை தீர்த்துகிட்டேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள இடை வரிகளின் பல்லவியை கண்டுபிடியுங்கள்(முடிந்தால் பாடல்கள் இடம்பெற்ற படங்களின் பெயரையும்).


1) தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்கபோகமே.

2) தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே.

3) மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்.

4) பழியே புரியும் கொடியோன் புசிக்க, பாலும் பழமும் தன்னை தேடித்தரும்.

5) எச்சிலை தன்னிலே எறியும் சோற்றுக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே.

6) நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது.

7) அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது, ஆணவம் இன்றோடொழிந்தது.

8) அச்சடித்திருக்கும் காகிதப் பெருமை, ஆண்டவனார்க்கும் இல்லையடா.

9) கஞ்சி குடிப்பதற்கில்லா, அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லா

10) அன்னங்கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்.


அப்புறம் மேலேயுள்ள எல்லா பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றும் கண்டுபிடியுங்கள்.

16 comments:

Show/Hide Comments

Post a Comment