Friday, January 20, 2012

கலைமொழி 10

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


சென்ற கலைமொழிக்கான விடை :- கரும்பு எப்படிமா இருக்கும் கருப்பாக இனிப்பாக இருக்கும் என்று படித்திருக்கிறேன் இப்ப கரும்பு எங்க கிடைக்கும் இப்ப எங்கேயும் கிடைக்காதுடி அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!


விடை கூறியவர்கள் :- ஹரிஹரன், முத்து, பூங்கோதை, 10அம்மா, கலை, ராமசாமி ஆகியோர்.

16 comments:

பூங்கோதை(Poongothai) said...

யோ: முடி வளர்ந்தால் வெட்டிக் கொள்ளலாம், நகம் வளர்ந்தால்கூட வெட்டிக் கொள்ளலாம். ஆனால் அறிவு வளர்ந்தால்?
பூ: கவலைப்படாதீர்கள், உங்கள் நல்ல (?) மனதுக்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. தைரியமா இருங்க.

Madhav said...

ungala mathiri nallavanga kooda iurkkumpothu avvalao seekiram arivu varaluma enna ? nan thairiyamathan irukken.

பூங்கோதை(Poongothai) said...

It will be nice if one magic text box can display the text that we solved, from where we can copy /paste into comments. some people are too busy to type long sentences, that they are running away if I put big paragraphs.

யோசிப்பவர் said...

பூங்கோதை,

சரியான விடை!!!

I'll try to consider ur idea.

யோசிப்பவர் said...

மாதவ்,

இதுக்குதான் என்கூட எல்லாம் சேராதீங்கன்னு சொல்றது. பாருங்க, இப்ப யாருக்கு நஷ்டம்?!?

;)))

அரசு said...

முடி வளர்ந்தால் வெட்டிக் கொள்ளலாம். நகம் வளர்ந்தால் கூட வெட்டிக் கொள்ளலாம். ஆனால் அறிவு வளர்ந்தால்? கவலைப்படாதீர்கள். உங்கள் நல்ல மனதுக்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. தைரியமாக இருங்க.

-அரசு

யோசிப்பவர் said...

அரசு,

சரியான விடை

தமிழ் பிரியன் said...

சாரே! ரொம்ப நாள் கழிச்சு ப்ளாக் பக்கம் வந்து இருக்கோம்.. இப்படியா கஷ்டப்படுத்துவீங்க... முடி வளர்ந்தால் வெட்டிக் கொள்ளலாம்.. நகம் வளர்ந்தால்கூட வெட்டிக் கொள்ளலாம்.. ஆனால் அறிவு வளர்ந்தால் கவலைப்படாதீர்கள்.. உங்கள் நல்ல மனதுக்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது..தைரியமா இருங்க.

10அம்மா said...

முடி வளர்ந்தால் வெட்டிக் கொள்ளலாம் நகம் வளர்ந்தால்கூட வெட்டிக் கொள்ளலாம் ஆனால் அறிவு வளர்ந்தால் கவலைப்படாதீர்கள் உங்கள் நல்ல மனதுக்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது தைரியமா இருங்க.

ரூம் போட்டு யோசிப்பிங்களோ

Muthu said...

முடி வளர்ந்தால் வெட்டிக் கொள்ளலாம்; நகம் வளர்ந்தால்கூட வெட்டிக் கொள்ளலாம். ஆனால் அறிவு வளர்ந்தால் கவலைப் படாதீர்கள். உங்கள் நல்ல மனதுக்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. தைரியமா இருங்க.

ஹரி said...

முடி வளர்ந்தால் வெட்டிக்கொள்ளலாம். நகம் வளர்ந்தால்கூட வெட்டிக்கொள்ளலாம். ஆனால் அறிவு வளர்ந்தால்? கவலைப்படாதீர்கள், உங்கள் நல்ல மனதுக்கு அப்படி எல்லாம் நடக்காது. தைரியமா இருங்க.

யோசிப்பவர் said...

10அம்மா,

சரியான விடை!!

மல்லாந்துப் படுத்து யோசிப்போம்!!;)

யோசிப்பவர் said...

முத்து,

சரியான விடை!!

யோசிப்பவர் said...

ஹரி,

சரியான விடை!!

யோசிப்பவர் said...

தமிழ் பிரியன்,

சரியான விடை!!

Thamizhini said...

யோசிப்பவரே, கதை எழுதுகிறேனையும் கொஞ்சம் கவனியுங்கள், உங்கள் கதையை விமர்சரித்து நாளாகிறது.