Monday, August 25, 2008

குறுக்கெழுத்துப் புதிர்

போன வாரம் நம்ம இலவசக்கொத்தனார் Cryptic வகை குறுக்கெழுத்துப் புதிர் போட்டார். அவரைத் தொடர்ந்து நாமும் அதே மாதிரி Cryptic குறுக்கெழுத்துப் புதிர் போட்டால் என்ன என்று தோன்றியதால் போட்டாச்சு. ஆனால் கொத்தனார், வாஞ்சி போன்றவர்களின் புதிர்கள் ஹிண்டு, எக்ஸ்ப்ரெஸ் ரேஞ்ச் என்றால், நம்மளுது வாரமலர் ரேஞ்சுக்குத்தான் வந்தது. இருந்தாலும் பரவாயில்லைன்னு பதிஞ்சாச்சு.

குறுக்கெழுத்துப் புதிர்னா, அதன் கட்டங்கள் Symmetric ஆக இருக்க வேண்டும் என்பது விதியாம். நம்மோடது அப்படியில்லைங்கிறது பெரிய குறையாய்டுச்சு. ஆனால், ஏன் கட்டங்கள் Symmetryயாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. நான் அறிந்து கொண்ட வரையில், அது ஒரு Standard என்பதாக மட்டும்தான் ஆங்கில ஊடகங்கள் பின்பற்றுகின்றன. மற்றபடி, இந்த விதியின் மூலம் புதிரை விடுவிப்பதில் கஷ்டமோ, சுவாரஸ்யம் கூட்டுதலோ இல்லை என்பதே என் கருத்து. இது மட்டுமில்லாமல் வேறு சில Standardகளையும் வெவ்வேறு ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. அவற்றையெல்லாம் நாம் தமிழுக்கும் பயன்படுத்துவது கஷ்டம் என்பதால், அவற்றோடு சேர்த்து இந்த Symmetric விதியையும் நான் விட்டு விட்டேன்(அப்பாடா, ஒரு வழியாக சமாளித்தாயிற்று!!)

ஏற்கெனவே சொன்னது போல், இது Cryptic வகைப் புதிர். அதாவது கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள், விடையை நேரிடையாக விளக்காமல், விடையை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து, அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைந்திருக்கும். ஒரு உதாரணம் தருகிறேன்.

ஆசிரியப்பாவின் தலையை கொய்தால் கவலை ஏற்படும்(3) - இதற்கு விடை : "கவல்" ஆசிரியப்பா என்பது அகவலோசையுடையது. அதனால் அது 'அகவல்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அகவல் என்ற வார்த்தையின் தலையைக் கொய்தால், அதாவது முதல் எழுத்தை எடுத்துவிட்டால் - கவல். கவல் என்றால் கவலை என்று பொருள்.

மேலும் விளக்கங்களுக்கு வாஞ்சியின் இந்தக் கட்டுரையைப் பாருங்கள்.

உதாரணத்தில் உள்ளது போல், கவல் போன்ற கஷ்டமான வார்த்தைகள், ஒன்றிரண்டுதான் இந்தப் புதிரில் கொடுத்திருக்கிறேன். பெரும்பாலும் எளிதான கேள்விகள்தான். நிரப்ப ஆரம்பித்தால் உங்களுக்கே ஆர்வமாயிருக்கும் என்று நம்புகிறேன்.

கொத்தனாரின் உதவியோடு(அவருக்கு உதவியவர் கே.ஆர்.எஸ்.) பதிவிலேயே நிரப்பக் கூடிய கட்டங்களைக் கொடுத்திருக்கிறேன். இனி புதிர்.

11817
16
919
320
781012
2
414
5
6111315


இடமிருந்து வலம் :

1) கடவுச் சொல் சொல்லி உள்ளே நுழையவும்.(4)
4) பறக்க ஆரம்பித்தால் விருந்தை முடித்து விடலாம்.(4)
8) ஆரம்பத்தின் முடிவில் பரம்பரையை ஆரம்பித்தால் தலை சுற்றும்.(5)
11) அடுத்தப் பாதியில் உப்பைக் கரைத்தால் சமைக்கலாம்.(4)
14) தவத்தை முதலில் கொடுத்தால் வளத்தில் கொஞ்சம் தந்து இடம் கொடுப்போம்.(3)
16) பசு மேயும் உள்ளாடையின் ஓரங்களை நறுக்கி அங்கு குறைத்தால் மரியாதை.(4)
18) காதலின் மூலம் முடிப்பதே உத்தமம்.(3)


மேலிருந்து கீழ் :

1) கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்பாக்கினாள்.(3)
2) கெஞ்சிக் கேட்டால் பாதி ஆட்சி செய்யலாம்.(4)
3) பசுவை ஓட்டிக் கொண்டு போனால் உபத்திரவம் வரும்.(4)
4) பழகத் தொடங்கினால் முடிவில் வந்து விளையாடும்.(3)
7) முடிவற்ற எளிமையின் இறுதியில் குழந்தையைக் கண்டாள் வஞ்சி.(4)
12) நடுவில் அசிரத்தையாக இருந்துவிட்டால் முடிவில் அபத்தமாகி குருதி வெளிப்படும்.(4)
17) மணாளனே ஆரம்பம் இவளுக்குள் கங்கையும் கரைந்துவிடும்.(3)
19) மச்சத்தில் மீதியும் பாதியும் சேர்த்து வை.(4)


வலமிருந்து இடம் :

6) பகுத்தறிவை பகுக்க முயன்றால் தாக்கப்படுவோம்.(3)
9) வழ வழ என்று பேசிக் கொண்டிருந்தால் ஆமணக்காக முடிந்துவிடும்.(4)
19) சங்கொலிக்க ஆரம்பித்தால் கடைசித் தங்கை அச்சப்படுவாள்.(3)
20) சபாஷ் என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட்டம் வரும்.(2)

கீழிருந்து மேல் :

3) நதிக்கரையோரம் ஆண்கள் தவம் செய்தால் ஒளி பெறலாம்.(4)
5) துருப்பிடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் பயனில்லாமல் போய் விடும் முனை.(4)
10) பானையின் காலை ஒடித்தால் நெடு நெடுவென வளர்ந்து விடும்.(2)
12) சூரியன் என்றதும் காக்கை முண்டமாகிவிடும்.(4)
13) முடிவற்ற ஞானியின் உள்ள முடிவில் ஞானம் கிடைக்கும்.(5)
15) தலையை வெளிக்காட்டுவது கொஞ்சம் சிரமம்தான்.(3)
20) பாதி பயத்திலேயே மூடன் ஒங்கி அடித்துவிட்டான்.(5)

8 comments:

யோசிப்பவர் said...

அமர்,
//* - இது தவறான விடையாக இருக்க வாய்ப்பு நிறைய உள்ளது.//

சரியாக கணித்துள்ளீர்கள். * எல்லாம் தவறு. * இல்லாதவற்றில் கீ.மே. 5 மட்டும் தவறு.

அசத்தியிருக்கிறீகள்!!! வ.இ. 19ஐ கூட சரியாகப் போட்டிருக்கிறீர்கள். நீங்களா தமிழில் வீக்?!;-)

மூன்று *களையும்கூட எடுத்து விட முயலுங்களேன்!!;-)

தமிழ்நெஞ்சம் said...




ரொம்ப மெனக்கெட்டு இந்தக் கட்டங்களையெல்லாம் வரைந்து கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றிங்க


Sharepoint the Great said...

Hi. for TOP 10 commentator code..

If Code is not working for you.


Just Ping Here to download the code

இலவசக்கொத்தனார் said...

அண்ணா மொத்தம் மூணு விடைதான் தெரிஞ்சது. ஆயிரம் பொன்னை அமருக்குக் கொடுத்து விடைகளைச் சொல்லுங்க ப்ளீஸ்!

Amar said...

இடமிருந்து வலம் :

1) கடவுச் சொல் சொல்லி உள்ளே நுழையவும்.(4) கடவுள்
4) பறக்க ஆரம்பித்தால் விருந்தை முடித்து விடலாம்.(4) பருந்து
8) ஆரம்பத்தின் முடிவில் பரம்பரையை ஆரம்பித்தால் தலை சுற்றும்.(5) பம்பரம்
11) அடுத்தப் பாதியில் உப்பைக் கரைத்தால் சமைக்கலாம்.(4) அடுப்பு
14) தவத்தை முதலில் கொடுத்தால் வளத்தில் கொஞ்சம் தந்து இடம் கொடுப்போம்.(3) தளம்
16) பசு மேயும் உள்ளாடையின் ஓரங்களை நறுக்கி அங்கு குறைத்தால் மரியாதை.(4) மேலங்கி*
18) காதலின் மூலம் முடிப்பதே உத்தமம்.(3) காமம்


மேலிருந்து கீழ் :

1) கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்பாக்கினாள்.(3) கடுகு*
2) கெஞ்சிக் கேட்டால் பாதி ஆட்சி செய்யலாம்.(4) சடுகுடு*
3) பசுவை ஓட்டிக் கொண்டு போனால் உபத்திரவம் வரும்.(4) ஆபத்து
4) பழகத் தொடங்கினால் முடிவில் வந்து விளையாடும்.(3) பந்து
7) முடிவற்ற எளிமையின் இறுதியில் குழந்தையைக் கண்டாள் வஞ்சி.(4) மடந்தை
12) நடுவில் அசிரத்தையாக இருந்துவிட்டால் முடிவில் அபத்தமாகி குருதி வெளிப்படும்.(4) ரத்தம்
17) மணாளனே ஆரம்பம் இவளுக்குள் கங்கையும் கரைந்துவிடும்.(3) மங்கை
19) மச்சத்தில் மீதியும் பாதியும் சேர்த்து வை.(4) சம்பாதி


வலமிருந்து இடம் :

6) பகுத்தறிவை பகுக்க முயன்றால் தாக்கப்படுவோம்.(3) குத்து
9) வழ வழ என்று பேசிக் கொண்டிருந்தால் ஆமணக்காக முடிந்துவிடும்.(4) வழக்கு
19) சங்கொலிக்க ஆரம்பித்தால் கடைசித் தங்கை அச்சப்படுவாள்.(3) சங்கை
20) சபாஷ் என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட்டம் வரும்.(2) சபா

கீழிருந்து மேல் :

3) நதிக்கரையோரம் ஆண்கள் தவம் செய்தால் ஒளி பெறலாம்.(4) ஆதவன்
5) துருப்பிடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் பயனில்லாமல் போய் விடும் முனை.(4) திருப்பு
10) பானையின் காலை ஒடித்தால் நெடு நெடுவென வளர்ந்து விடும்.(2) பனை
12) சூரியன் என்றதும் காக்கை முண்டமாகிவிடும்.(4) ரவிக்கை
13) முடிவற்ற ஞானியின் உள்ள முடிவில் ஞானம் கிடைக்கும்.(5) புத்தகம்
15) தலையை வெளிக்காட்டுவது கொஞ்சம் சிரமம்தான்.(3) சிரம்
20) பாதி பயத்திலேயே மூடன் ஒங்கி அடித்துவிட்டான்.(5) சம்மட்டி

* - இது தவறான விடையாக இருக்க வாய்ப்பு நிறைய உள்ளது.
மற்ற விடைகள் சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது.;)

ஏன்னா? நான் தமிழ்ல கொஞ்சம் வீக்.

இந்த மாதிரி புதிர் எனக்கு பிடிக்கலை ;( தயவுசெய்து குதிரை வீரர்கள், பந்து மாதிரி புதிர்கள் போடவும். அதில் குறைந்தது விடை சரி அல்லது தவறு என்பதையாவது கண்டு பிடித்து விடலாம் :-)

நன்றி.

யோசிப்பவர் said...

அமர்,

16) வணங்கு (பசு மேயும் உள்ளாடை = கோவணம்)
1) கமுகு
2) இரண்டு = இர + (ஆ)ண்டு
5) துருவம் = துரு + (அ)வம்

இந்த தடவை அவ்வளவு சரியா வரலை. அடுத்த த்டவை சிறப்பா செய்ய முயல்கிறேன்!!

Amar said...

கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்பாக்கினாள். கமுகு ?

/*இந்த தடவை அவ்வளவு சரியா வரலை. அடுத்த த்டவை சிறப்பா செய்ய முயல்கிறேன்!!*/
ஏன், நான் கூட சரியான விடையை கண்டு பிடித்து விட்டேன் என்றா? ;-)

நன்றாக தான் இருந்தது, நண்பர்கள் பலர் பங்கேற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

உங்களின் அடுத்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

யோசிப்பவர் said...

அமர்,
//கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்பாக்கினாள். கமுகு ?
//

மார்பின் பின்புறம் = மு(து)கு
கமுகு = பாக்கு