Monday, May 29, 2006

சில குறிப்புகள் - மதுமிதாவுக்காக

வலைத்துணுக்கர் பெயர்
======================

யோசிப்பவர்


வலைத்துணுக்குகள்
==================

யோசிங்க - http://yosinga.blogspot.com/
குறு குறு குறுஞ்செய்தி - http://kurunjeythi.blogspot.com/
கதை எழுதுகிறேன் - http://kathaiezuthukiren.blogspot.com

இன்னும் மூன்று துணுக்குகள் சொந்த உபயோகத்துக்காக வைத்திருக்கிறேன். அவற்றை பற்றி குறிப்பு தர விரும்பவில்லை.



ஊர்
===

சொந்த ஊர் : தூத்துக்குடி

இப்பொழுது : சென்னை

நாடு : தமிழ்நாடு, இந்திய துணைக்கண்டம்(அட! நான் தனித் தமிழ்
நாடெல்லாம் கேக்கலீங்க!!!)



வலைப்பூ அறிமுகம் செய்தவர்
===========================

முதல் முதலாக பார்த்த வலைப்பதிவு : இட்லி வடை

அறிமுகப்படுத்தியவர் : மா.சிவக்குமார்('ழ' கணிணி)

விளக்கம் கொடுத்தவர் : ஜெயராதா('ழ' கணிணி)



முதலாவது
==========

முதல் வலைத்துணுக்கு : யோசிங்க

முதல் துணுக்கு ஆரம்பித்த நாள் : ஆகஸ்ட் 26, 2004.

முதல் துணுக்கு : என்னைப் பற்றிய சிறு அறிமுகம்



இந்த துணுக்கு
=============

இது எத்தனையாவது துணுக்கு : 300வது (மூன்று வலைத்துணுக்குகளையும் சேர்த்து)

இந்த துணுக்கின் சுட்டி : http://yosinga.blogspot.com/2006/05/blog-post_29.html



வலைப்பு ஏன் ஆரம்பித்தேன்
=========================

பொழுது போகவில்லை. ஆரம்பித்தேன்.(நிஜமாகவே அப்படித்தான்.
கிண்டலில்லை)



சந்தித்த அனுபவங்கள்
====================

நல்லவை : எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்தது, அவரது
மேற்பார்வையில் சில தினங்கள் இருந்தது, அம்பலமில் எனது சில
கதைகள் பிரசுரமானது, வலைப்பூவில் எனது துணுக்குகளை கவனிக்க
ஆரம்பித்தது, தினமலர் எனது துணுக்கை பற்றி பிரசுரித்தது,
குறுஞ்செய்தி வலைத்துணுக்கிற்கு கிடைத்த வரவேற்பு, மரத்தடி-திண்ணை
நடத்திய அறிவியல் புனைகதைகள் போட்டி பற்றி வலப்பதிவுகள் மூலம்
அறிந்து கொண்டதால், அதில் கலந்து கொண்டது, அதில் பிரசுரத்துக்கு
தகுந்ததாக எனது கதை தேர்ந்தெடுக்கப்பட்டு
பிரசுரிக்கப்பட்டது(எதிர் காலம் என்று ஒன்று),இப்பொழுது அதே போல்
நம்பிக்கையொளி போட்டியிலும் கலந்து கொள்வது.....

கெட்டவை : தோல்விகள், போலிகள்



பெற்ற நண்பர்கள்
================

அரசியலில் மட்டுமல்ல, எழுத்துலகிலும், குறிப்பாக
வலைத்துணுக்கர்களிடையில், யாரும் நிரந்தர நண்பர்களும் கிடையாது;
நிரந்தர எதிரியும் கிடையாது.



கற்றவை
========

அஞ்சல் முறையில் வேகமாக தமிழில் தட்டச்சு செய்ய. யுனிகோடு சப்போர்ட் இல்லாத கணிணியில்கூட ஆங்கிலத்திலேயே, தேவையானவற்றை
வேகமாக, பிழையில்லாமல் தட்டச்சு செய்து விட்டு, பின்பு கன்வெர்ட் செய்து
கொள்ளுமளவுக்கு!!!



எழுத்தில் கிடைத்த சுதந்திரம்
==========================

பொதுவாக நான் யாரிடமும் அவ்வளவாக பேசுவது கிடையாது. ரொம்பவும்
ரிசர்வ்ட். அந்த ரிசர்வ்ட் தனத்தை என்னால் என் எழுத்தில் உடைக்க
முடிகிறது.



இனி செய்ய நினைப்பவை
=======================

இதுவரை ஒன்றும் நினைக்கவில்லை.



என்னை பற்றிய சிறு குறிப்பு(மன்னிக்கவும்! முழுமையான
===================================================
குறிப்பு கொடுக்க ஒன்றுமில்லை!!!)
===============================

நான் ரொம்ப குழப்பமான ஆள். எனக்கே என்னை புரிவதில்லை.
'மிஸ்ஸியம்மா'வையும் விரும்பி பார்க்கிறேன். 'பேக் டு தி ஃபியூச்சரை'யும் விரும்பி பார்க்கிறேன். சுஜாதாவும் பிடிக்கிறது, கல்கியும் பிடிக்கிறது.செல்வ
ராகவனையும், எஸ்.ஜே சூர்யாவையும் ரசிக்க மாட்டேன், ஆனால்
பாராட்டுகிறேன். ஏனோ பெண்களை பிடிக்கவில்லை, அதற்காக
வெறுக்கவுமில்லை. ஒரு கணம் மிக சிறந்த அறிவாளியாயிருக்கிறேன், சில
கணம் வடி கட்டிய முட்டாளாயும் இருக்கிறேன். உங்களுக்கே தெரிந்திருக்கும். 'யோசிங்க'வையும் மெய்ன்டென்ய்ன் பண்ணுகிறேன், 'குறுஞ்செய்திகள்'யும் மெய்ன்டெய்ன் பண்ணுகிறேன். உங்களுக்கு என்னை புரிகிறதா?



கடைசியாக சொல்ல நினைக்கும் ஒன்று
====================================

ஒரு ஜென் குரு சொன்னது போல, "சொல்வதற்கு என்ன இருக்கிறது?"

5 comments:

Show/Hide Comments

Post a Comment