Monday, February 20, 2006

சார்பியல் தத்துவம் - வெளி சார்பானது

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி
--------------------------------------------------


பல நிகழ்ச்சிகள் ஒரே இடத்தில் நடப்பதாக சொல்கிறோம். இந்த கூற்று உண்மையிலேயே அர்த்தமற்றது. இதற்கு ஒரு சின்ன உதாரணத்தை பார்ப்போம்.

நீங்கள் சென்னையில்ரிருந்து டெல்லிக்கு உங்கள் Laptop சகிதம் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பயணத்தின்பொழுது அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற நேரங்களில் நீங்கள் உங்கள் இருக்கையை விட்டு அசையவேயில்லை. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை உங்கள் இருக்கையில் சாய்ந்து கொண்டு சென்னையிலிருக்கும் உங்கள் அலுவலகத்துக்கு இமெயில் செய்கிறீர்கள். உங்களை பொறுத்தவரை நீங்கள் அனுப்பிய எல்லா இமெயில்களும் ஒரே இடத்திலிருந்து அனுப்பியவை. ஆனால் உங்கள் அலுவலகத்தில், அவை ஒரே ஆளிடமிருந்து வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவை.

இரண்டில் எது சரி? இரண்டுமே சரியில்லை. ஏனென்றால் இரண்டுமே கொஞ்சம் உண்மை. கொஞ்சம் பொய். வெளியில்(Space) எந்த இடமும் அல்லது எந்தப் புள்ளியும் அதே இடத்தில் இருப்பது என்ற கருத்து சார்பானாது.

நீங்கள் இதற்கு ரயிலில் கூட பயணம் செய்ய வேண்டாம். "நீங்கள் அதே இடத்தில் நிற்கிறீகள்" என்றால் அந்த இடம் பூமியை சார்ந்து மட்டுமே அதே இடம். பூமி சுற்றும் சூரியனையோ, பூமியை சுற்றும் சந்திரனையோ கூட சார்ந்து நீங்கள் அதே இடத்தில் நிற்கவில்லை.

இரண்டு நட்சத்திரங்கள் வெளியில் ஒரே கோட்டில் வருகிறது என்றோ, ஒருங்கிணைகிறது என்றோ சொல்கிறொம். இவையெல்லாம் அவையிரண்டும் எந்தப் புள்ளியிலிருந்து பார்வையிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது.

இதன் மூலம் உணர்த்தப்படுவது வெளியில் எந்தப் புள்ளியின் இடமும் சார்பானதே.

- மீண்டும் பார்(அறு)ப்போம்

No comments:

Post a Comment