Monday, January 16, 2006

இஷ்டத்துக்கு யோசிங்க - விடைகள்

சரி. ரொம்பவும் இழுக்கலை. விடையை சொல்லிவிடுகிறேன்.

1) உயரரரரமான கட்டிடத்திலிருந்து குதித்தவன் எப்படி சாகாமல் தப்பித்தான் என்று நீங்கள் யோசித்திருந்தால் விடையை ஊகிக்கலாம். அவன் குதித்த பொழுது அந்த கட்டிடம் தீப்பிடித்திருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரித்த வலையில் விழுந்ததால் அவன் உயிர் தப்பினான். தீயிலிருந்து தப்பிக்கவே அவன் குதித்ததாக எண்ணியதால் போலிசார் அவன் மீது வழக்கு பதியவில்லை.

2) பெயரிலேயே க்ளூ கொடுத்திருந்தேனே. (நரேன்) கார்த்தி(கேயன்) ஒரு ஃபார்முலா ஒன் ரேசர். பந்தயத்தில் அவன் ஓட்டிக்கொண்டிருந்தபொழுது சேர வேண்டிய இடம் அவன் கண்ணுக்கு தெரிந்தது(ஒரு லேப் முடிவில்). ஆனாலும் அவன் இன்னும் 400 மைல் பயணம் செய்ய வேண்டும்.

3) இந்த கேள்விக்குதான் ராஜ் சரியான விடை கூறியிருந்தார். அவன் கிராமத்தில் வசிப்பவன். சேவல் கூவவும் எழும் பழக்கம் உள்ளவன். அன்று இரவு அவன் சுட்டது அவன் சேவலைத்தான். அதனால் அதற்கு பிறகு அவனால் விடியலுக்கு முன் எழ முடியவில்லை.

4) டாமிடம் நெருப்பு பற்ற வைக்க வசதியிருந்தாலும் விறகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன. அதனால் அவற்றை வீணாக்க அவன் விரும்பவில்லை. பத்தாவது நாள் இரவு ஒரு கப்பல் அந்த தீவின் ஓரமாக கடப்பதை கவனித்த டாம், அவர்கள் கவனத்தை கவர நெருப்பு பற்ற வைத்தான்.

No comments:

Post a Comment